கணவர் மீது பொய் வழக்குப் போட்டு சிறையில் அடைப்பு: நடவடிக்கை எடுக்கக் கோரி அ.தி.மு.க பெண் வேட்பாளர் எஸ்.பி.யிடம் புகார்

நில அபகரிப்பு என்று பொய் வழக்குப் போட்டு சிறையில் கணவர் அடைக்கப்பட்டுள்ளதாக அ.தி.மு.க வேட்பாளர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளார்.


கோவை: நில அபகரிப்பு என்று பொய் வழக்குப் போட்டு சிறையில் கணவர் அடைக்கப்பட்டுள்ளதாக அ.தி.மு.க வேட்பாளர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளார்.

கோவை பேரூர் அங்காளம்மன் கோவில் வீதியை சேர்ந்த மாணிக்கம் என்பவரின் மனைவி சரோஜினி (74). இவர் கோவை மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.

அந்த மனுவில் கடந்த 9 ஆம் தேதி காலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திலிருந்து வருவதாகக் கூறி சரோஜினியின் கணவர் மாணிக்கத்தை போலீஸார் சிலர் அழைத்துச் சென்றுள்ளனர்.

தொடர்ந்து சரோஜினி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு வந்து பார்த்த போது விசாரணை முடிந்த பிறகு மாணிக்கத்தை அனுப்பி விடுவதாகக் கூறியுள்ளனர். இதையடுத்து அவர் வீட்டிற்குச் சென்று விட்டார்.

மறுநாள் காலை தனது கணவர் மாணிக்கம் கைது செய்யப்பட்டு பல்லடம் சிறையில் அடைக்கப்பட்டு இருப்பதாகச் செய்திகளில் வந்த தகவலை அறிந்து சரோஜினி அதிர்ச்சி அடைந்தார்.

ஏற்கனவே சொத்து சம்பந்தமாக நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது. அந்த வழக்கில் எந்த விதமான பிடிவாரண்டும் இல்லாமல் தனது கணவரைச் சிறையில் அடைத்தது தவறு என்றும் அ.தி.மு.க வேட்பாளராக உள்ளாட்சித் தேர்தலில் நான் போட்டியிடுவதால் இவ்வாறு கைது செய்துள்ளனர்.

இது திட்டமிட்ட சதி என்றும் இதுகுறித்து உரிய விசாரணை நடத்தித் தீர்வு ஏற்படுத்தித் தருமாறு அந்த மனுவில் சரோஜினி தெரிவித்துள்ளார். உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க வேட்பாளரின் கணவரை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவரது மனைவி அளித்த புகாரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...