கணவர் மீது பொய் வழக்குப் போட்டு சிறையில் அடைப்பு: நடவடிக்கை எடுக்கக் கோரி அ.தி.மு.க பெண் வேட்பாளர் எஸ்.பி.யிடம் புகார்

நில அபகரிப்பு என்று பொய் வழக்குப் போட்டு சிறையில் கணவர் அடைக்கப்பட்டுள்ளதாக அ.தி.மு.க வேட்பாளர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளார்.


கோவை: நில அபகரிப்பு என்று பொய் வழக்குப் போட்டு சிறையில் கணவர் அடைக்கப்பட்டுள்ளதாக அ.தி.மு.க வேட்பாளர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளார்.

கோவை பேரூர் அங்காளம்மன் கோவில் வீதியை சேர்ந்த மாணிக்கம் என்பவரின் மனைவி சரோஜினி (74). இவர் கோவை மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.

அந்த மனுவில் கடந்த 9 ஆம் தேதி காலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திலிருந்து வருவதாகக் கூறி சரோஜினியின் கணவர் மாணிக்கத்தை போலீஸார் சிலர் அழைத்துச் சென்றுள்ளனர்.

தொடர்ந்து சரோஜினி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு வந்து பார்த்த போது விசாரணை முடிந்த பிறகு மாணிக்கத்தை அனுப்பி விடுவதாகக் கூறியுள்ளனர். இதையடுத்து அவர் வீட்டிற்குச் சென்று விட்டார்.

மறுநாள் காலை தனது கணவர் மாணிக்கம் கைது செய்யப்பட்டு பல்லடம் சிறையில் அடைக்கப்பட்டு இருப்பதாகச் செய்திகளில் வந்த தகவலை அறிந்து சரோஜினி அதிர்ச்சி அடைந்தார்.

ஏற்கனவே சொத்து சம்பந்தமாக நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது. அந்த வழக்கில் எந்த விதமான பிடிவாரண்டும் இல்லாமல் தனது கணவரைச் சிறையில் அடைத்தது தவறு என்றும் அ.தி.மு.க வேட்பாளராக உள்ளாட்சித் தேர்தலில் நான் போட்டியிடுவதால் இவ்வாறு கைது செய்துள்ளனர்.

இது திட்டமிட்ட சதி என்றும் இதுகுறித்து உரிய விசாரணை நடத்தித் தீர்வு ஏற்படுத்தித் தருமாறு அந்த மனுவில் சரோஜினி தெரிவித்துள்ளார். உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க வேட்பாளரின் கணவரை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவரது மனைவி அளித்த புகாரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Newsletter

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி கோவை காவல் ஆணையரிடம் தவெக மகளிர் அணி புகார்

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து பேசியதாகக் கூறி, உதயநிதி மீது சட்டரீதியான நடவ...

கேஎம்சிஹெச்சில் உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர் திறப்பு விழா

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் ஆகஸ்ட் 2ம் தேதி 'லைஃப் ஆப்டர் லைஃப் 2026' விழாவும், உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர்...

சித்தாபுதூர் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளி ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை சித்தாபுதூரில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் ஜூலை 31ஆம் தேதி சிற...

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...