சிங்காநல்லூர் குளத்தில் அரியவகை சிறு நறுவிலி தாவரம் நடப்பட்டது

உலக நீர்நிலை தினத்தை முன்னிட்டு கோவை பகுதியில் மட்டுமே காணப்படும் மற்றும் ஆபத்தான நிலையில் உள்ளவற்றை பாதுகாத்தல் மற்றும் மீண்டும் அறிமுகப்படுத்துதல் நிகழ்வு சிங்காநல்லூர் குளத்தில் நடைபெற்றது.


கோவை: உலக நீர்நிலை தினத்தை முன்னிட்டு கோவையில் மட்டுமே காணப்படும் மற்றும் அழிவின் விளிம்பில் உள்ள அரியவகை சிறு நறுவிலி தாவரம் சிங்காநல்லூர் குளத்தில் நடப்பட்டது.

இதில் கோவையில் மட்டுமே காணப்படும் அரியவகை சிறு நறுவிலி தாவரம் தன்னார்வலர்கள் மற்றும் வனத்துறையினரால் சிங்காநல்லூர் குளத்தில் நடப்பட்டது. இந்த தாவரத்தின் பெயர் கோவை மாஞ்சாக் தாவரம் அல்லது சிறு நறுவிலி தாவாரம்.

இது ஒரு மீட்டர் உயரமுள்ள புதர் செடியாகும். மரக்கிளைகளின் அனைத்து திசைகளிலும் பரவி வளரக்கூடியது. ஆண்டு முழுவதும் பூக்கும் மற்றும் காய்க்கும். இந்த தாவரம் முதன்முதலில் டாக்டர் செரியன் ஜேக்கப் என்பவரால் 2 மே 1938 இல் கண்டுபிடிக்கப்பட்டது.



இந்த உள்ளூர் தாவரத்தின் வாழ்விடமானது மனித குறுக்கீடுகளால் மிகவும் தொந்தரவு செய்யப்பட்டது. கோவை நகரின் இந்த அரிய வகை தாவரத்தை பற்றி அறிவும் விழிப்புணர்வும் ஏற்படுத்த சிங்கநல்லூர் குளத்தில் நேற்று தன்னார்வலர்கள் மற்றும் வனத்துறையால் நடப்பட்டது.

இந்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் இளங்கோ, கோவை வனமரபியல் மற்றும் இனப்பெருக்கும் இயக்குநர் குன்னி கண்ணன், விஞ்ஞாணி நாகராஜன், சலீம் அலி பறவைகள் ஆராய்ச்சி மைய விஞ்ஞாணி ப்ரோமோத் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Newsletter

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

வால்பாறை அணையில் மூழ்கி 21 வயது இளைஞர் உயிரிழப்பு: தேடுதல் பணி தீவிரம்

கோவை மாவட்டம் வால்பாறை அருகே அம்பலபார அணையில் நேற்று 21 வயது இளைஞர் தனுஷ் மூழ்கி காணாமல் போனார். திருமண நிகழ்ச்சிக்கு வந...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம், குப்பை...

திருப்பூரில் கோயில் உண்டியல் உடைத்து பணம் திருட்டு; சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் தேடல்

திருப்பூர் கருவம்பாளையம் அருகே எருக்கலாங்காடு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் கோயிலில் உண்டியல் உடைத்து பணம் தி...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி...