தவறவிட்ட பர்சை மீண்டும் உரியவரிடம் ஒப்படைத்த வாலிபருக்கு கோவை போலீசார் வாழ்த்து

கோவையில் சாலையில் கண்டெடுக்கப்பட்ட மணி பர்ஸை காவல்நிலையத்தில் ஒப்படைத்தவருக்கு போலீசார் பாராட்டு தெரிவித்துள்ளனர். அதில் 3 ஆயிரம் ரூபாய் பணம், ஏடிஎம் கார்டு, பான் கார்டு, ஸ்மார்ட் கார்டு, ஆதார் கார்டு உட்பட பல்வேறு விதமான முக்கிய ஆவணங்கள் இருந்தன.


கோவை: கோவையில் சாலையில் கண்டெடுக்கப்பட்ட மணி பர்ஸை காவல்நிலையத்தில் ஒப்படைத்தவருக்கு போலீசார் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

கோவையை சேர்ந்தவர் கார்த்திக் 20, இவர் இன்று கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள தண்ணீர் டேங்க் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது சாலையில் ஒரு பர்ஸ் கிடப்பதை பார்த்து எடுத்தார். அதில் 3 ஆயிரம் ரூபாய் பணம், ஏடிஎம் கார்டு, பான் கார்டு, ஸ்மார்ட் கார்டு, ஆதார் கார்டு உட்பட பல்வேறு விதமான முக்கிய ஆவணங்கள் இருந்தன.

உடனடியாக கார்த்திக் கோவை சரவணம்பட்டி காவல் நிலைய போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டர் இடம் ஒப்படைத்தார். பர்சில் இருந்த செல் நம்பரை உடனடியாக சப்-இன்ஸ்பெக்டர் அழைத்தார். அவர் தேனி மாவட்டம், ஓடைப்பட்டி ராயர் குல தெரு, பகுதியில் வாசிக்கக்கூடிய தங்கபாண்டியன் வயது 22, என்பதும் அவர் பிஎஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்து முடித்துவிட்டு காளம்பாளையத்தில் தங்கி வேலை தேடிக் கொண்டு இருந்ததும் தெரியவந்தது.

உடனடியாக அவரை காவல் நிலையம் அழைத்து கார்த்திக் கண்டெடுத்து கொடுத்த பரிசை அவர் முன்னிலையில் சப்-இன்ஸ்பெக்டர் தங்களிடம் ஒப்படைத்தார். தொடர்ந்து நேர்மையுடன் செயல்பட்ட வாலிபர் கார்த்திகை காவல்துறையினர் அனைவரும் பாராட்டினர்.

Newsletter

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி கோவை காவல் ஆணையரிடம் தவெக மகளிர் அணி புகார்

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து பேசியதாகக் கூறி, உதயநிதி மீது சட்டரீதியான நடவ...

கேஎம்சிஹெச்சில் உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர் திறப்பு விழா

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் ஆகஸ்ட் 2ம் தேதி 'லைஃப் ஆப்டர் லைஃப் 2026' விழாவும், உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர்...

சித்தாபுதூர் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளி ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை சித்தாபுதூரில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் ஜூலை 31ஆம் தேதி சிற...

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...