தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கியின் சோமனூர் கிளையில் மேலாளராக பணியாற்றியவர் 17 பேருக்கு 10 கோடியே 73 லட்சம் ரூபாய் கடன் வழங்கி மோசடி செய்துள்ளார்.
கோவை: கோவை சோமனூரில் போலி ஆவணங்களை கொடுத்து வங்கியில் 10 கோடி ரூபாய் மோசடி செய்தது தொடர்பாக வங்கி மேலாளர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டனர்.
தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி மண்டல அலுவலகத்தில் முதுநிலை மேலாளராக பணியாற்றி வருபவர் ஜெகன் குமார். இவர், கோவை மாவட்ட குற்றப்பிரிவில் ஒரு புகார் கொடுத்தார்.
அந்த புகாரில் அவர் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கியின் சோமனூர் கிளையில் முன்பு மேலாளராக பணியாற்றிய ராஜேஷ், 17 பேருக்கு 10 கோடியே 73 லட்சம் ரூபாய் கடன் வழங்கியுள்ளார்.
இந்த கடன்களுக்கு ஈடாக வழங்கப்பட்ட சொத்து ஆவணங்கள் போலியானவை என்று விசாரணையில் தெரியவந்தது.
ஒரு சில சொத்துக்களின் மதிப்பை மிக அதிகமாக காட்டியும், இல்லாத நிறுவனங்களை இருப்பதாக காட்டியும் கடன் வழங்கியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த மோசடியில் ஈடுபட்ட நபர்கள், அதற்கு உடந்தையாக இருந்தவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, இதனை விசாரித்த மாவட்ட குற்றப்பிரிவு போலீசார், போலி ஆவணங்கள் என்று தெரிந்தும் கடன் வழங்கிய வங்கி கிளை முன்னாள் மேலாளர் ராஜேஷ், போலி ஆவணங்கள் தயாரித்து கொடுத்த கனகராஜ் ஆகியோரை கைது செய்தனர்.
மேலும், மோசடியில் ஈடுபட்ட கார்த்திகேயன், ராதிகா, சம்பத்குமார், துரைராஜ், மகேஸ்வரி, ராஜூ ஆகிய ஆறு பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி மண்டல அலுவலகத்தில் முதுநிலை மேலாளராக பணியாற்றி வருபவர் ஜெகன் குமார். இவர், கோவை மாவட்ட குற்றப்பிரிவில் ஒரு புகார் கொடுத்தார்.
அந்த புகாரில் அவர் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கியின் சோமனூர் கிளையில் முன்பு மேலாளராக பணியாற்றிய ராஜேஷ், 17 பேருக்கு 10 கோடியே 73 லட்சம் ரூபாய் கடன் வழங்கியுள்ளார்.
இந்த கடன்களுக்கு ஈடாக வழங்கப்பட்ட சொத்து ஆவணங்கள் போலியானவை என்று விசாரணையில் தெரியவந்தது.
ஒரு சில சொத்துக்களின் மதிப்பை மிக அதிகமாக காட்டியும், இல்லாத நிறுவனங்களை இருப்பதாக காட்டியும் கடன் வழங்கியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த மோசடியில் ஈடுபட்ட நபர்கள், அதற்கு உடந்தையாக இருந்தவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, இதனை விசாரித்த மாவட்ட குற்றப்பிரிவு போலீசார், போலி ஆவணங்கள் என்று தெரிந்தும் கடன் வழங்கிய வங்கி கிளை முன்னாள் மேலாளர் ராஜேஷ், போலி ஆவணங்கள் தயாரித்து கொடுத்த கனகராஜ் ஆகியோரை கைது செய்தனர்.
மேலும், மோசடியில் ஈடுபட்ட கார்த்திகேயன், ராதிகா, சம்பத்குமார், துரைராஜ், மகேஸ்வரி, ராஜூ ஆகிய ஆறு பேரை போலீசார் தேடி வருகின்றனர்.