கோவை சோமனூர் அருகே போலி ஆவணம் கொடுத்து வங்கியில் 10 கோடி மோசடி - மேனேஜர் உட்பட இருவர் கைது..!

தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கியின் சோமனூர் கிளையில் மேலாளராக பணியாற்றியவர் 17 பேருக்கு 10 கோடியே 73 லட்சம் ரூபாய் கடன் வழங்கி மோசடி செய்துள்ளார்.


கோவை: கோவை சோமனூரில் போலி ஆவணங்களை கொடுத்து வங்கியில் 10 கோடி ரூபாய் மோசடி செய்தது தொடர்பாக வங்கி மேலாளர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டனர்.

தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி மண்டல அலுவலகத்தில் முதுநிலை மேலாளராக பணியாற்றி வருபவர் ஜெகன் குமார். இவர், கோவை மாவட்ட குற்றப்பிரிவில் ஒரு புகார் கொடுத்தார்.

அந்த புகாரில் அவர் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கியின் சோமனூர் கிளையில் முன்பு மேலாளராக பணியாற்றிய ராஜேஷ், 17 பேருக்கு 10 கோடியே 73 லட்சம் ரூபாய் கடன் வழங்கியுள்ளார்.

இந்த கடன்களுக்கு ஈடாக வழங்கப்பட்ட சொத்து ஆவணங்கள் போலியானவை என்று விசாரணையில் தெரியவந்தது.

ஒரு சில சொத்துக்களின் மதிப்பை மிக அதிகமாக காட்டியும், இல்லாத நிறுவனங்களை இருப்பதாக காட்டியும் கடன் வழங்கியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த மோசடியில் ஈடுபட்ட நபர்கள், அதற்கு உடந்தையாக இருந்தவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, இதனை விசாரித்த மாவட்ட குற்றப்பிரிவு போலீசார், போலி ஆவணங்கள் என்று தெரிந்தும் கடன் வழங்கிய வங்கி கிளை முன்னாள் மேலாளர் ராஜேஷ், போலி ஆவணங்கள் தயாரித்து கொடுத்த கனகராஜ் ஆகியோரை கைது செய்தனர்.

மேலும், மோசடியில் ஈடுபட்ட கார்த்திகேயன், ராதிகா, சம்பத்குமார், துரைராஜ், மகேஸ்வரி, ராஜூ ஆகிய ஆறு பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

Newsletter

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி கோவை காவல் ஆணையரிடம் தவெக மகளிர் அணி புகார்

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து பேசியதாகக் கூறி, உதயநிதி மீது சட்டரீதியான நடவ...

கேஎம்சிஹெச்சில் உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர் திறப்பு விழா

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் ஆகஸ்ட் 2ம் தேதி 'லைஃப் ஆப்டர் லைஃப் 2026' விழாவும், உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர்...

சித்தாபுதூர் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளி ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை சித்தாபுதூரில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் ஜூலை 31ஆம் தேதி சிற...

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...