நடைபெற உள்ள தமிழக உள்ளாட்சித் தேர்தலில் கோவை மாநகராட்சி 22வது வார்டுக்குட்பட்ட சேரன் மாநகர் குடியிருப்பு பகுதிகளில் தபால்காரர், இறைச்சிக் கடைக்காரர் உள்ளிட்டோர் வார்டு உறுப்பினர் பதவிக்குப் போட்டியிடுகின்றனர்.
கோவை: நடைபெற உள்ள தமிழக உள்ளாட்சித் தேர்தலில் கோவை மாநகராட்சி 22வது வார்டுக்குட்பட்ட சேரன் மாநகர் குடியிருப்பு பகுதிகளில் தபால்காரர், இறைச்சிக் கடைக்காரர் உள்ளிட்டோர் வார்டு உறுப்பினர் பதவிக்குப் போட்டியிடுகின்றனர்.
இந்த வார்டில் மொத்தம் 58 குடியிருப்பு நகர்கள் உள்ளன. மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 13 ஆயிரத்து 700 ஆக உள்ளது. இந்த தேர்தலில் சுயேச்சை வேட்பாளராகத் தபால்காரர், மாரியப்பன் போட்டியிடுகிறார். இதேபோல் நாம் தமிழர் கட்சி சார்பில் சசிகுமார் என்ற இறைச்சிக் கடை நடத்தி வருபவர் போட்டியிடுகிறார்.
இவர்கள் இருவரும் மக்கள் மத்தியில் கொண்ட அறிமுகம் கூட திமுக, அதிமுக கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு இல்லை. திமுக சார்பில் கோவை பாபு என்கிற செல்வகுமார் போட்டியிடுகிறார்.
இதேபோல் அதிமுக சார்பில் சண்முகசுந்தரம் போட்டியிடுகிறார். இவர்கள் இருவரும் கட்சியினர் மத்தியில் நன்கு அறிமுகம் பெற்றவர்களாக இருந்தாலும் வாக்காளர்கள் மத்தியில் அறிமுகம் மிகக் குறைவாக உள்ள வேட்பாளர்களாக இந்த தேர்தலில் களமிறங்கியுள்ளனர்.
எனவே இந்தத் தேர்தலில் இரு வேட்பாளர்களுக்கும் அவர்கள் சார்ந்திருக்கும் கட்சியின் சின்னம் அவர்கள் பெரும் வாக்குகளில் முக்கிய பங்கு வகிக்கும் என்பதில் சந்தேகமில்லை.
மக்கள் நீதி மய்யம் சார்பில் இந்த வார்டில் போட்டியிடும் வேட்பாளரும் மக்கள் மத்தியில் அதிக அறிமுகம் இல்லாதவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த வார்டில் மொத்தம் 58 குடியிருப்பு நகர்கள் உள்ளன. மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 13 ஆயிரத்து 700 ஆக உள்ளது. இந்த தேர்தலில் சுயேச்சை வேட்பாளராகத் தபால்காரர், மாரியப்பன் போட்டியிடுகிறார். இதேபோல் நாம் தமிழர் கட்சி சார்பில் சசிகுமார் என்ற இறைச்சிக் கடை நடத்தி வருபவர் போட்டியிடுகிறார்.
இவர்கள் இருவரும் மக்கள் மத்தியில் கொண்ட அறிமுகம் கூட திமுக, அதிமுக கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு இல்லை. திமுக சார்பில் கோவை பாபு என்கிற செல்வகுமார் போட்டியிடுகிறார்.
இதேபோல் அதிமுக சார்பில் சண்முகசுந்தரம் போட்டியிடுகிறார். இவர்கள் இருவரும் கட்சியினர் மத்தியில் நன்கு அறிமுகம் பெற்றவர்களாக இருந்தாலும் வாக்காளர்கள் மத்தியில் அறிமுகம் மிகக் குறைவாக உள்ள வேட்பாளர்களாக இந்த தேர்தலில் களமிறங்கியுள்ளனர்.
எனவே இந்தத் தேர்தலில் இரு வேட்பாளர்களுக்கும் அவர்கள் சார்ந்திருக்கும் கட்சியின் சின்னம் அவர்கள் பெரும் வாக்குகளில் முக்கிய பங்கு வகிக்கும் என்பதில் சந்தேகமில்லை.
மக்கள் நீதி மய்யம் சார்பில் இந்த வார்டில் போட்டியிடும் வேட்பாளரும் மக்கள் மத்தியில் அதிக அறிமுகம் இல்லாதவர் என்பது குறிப்பிடத்தக்கது.