தபால்காரர், இறைச்சிக் கடைக்காரர் சேரன்மாநகர் வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டி: மக்களிடம் அறிமுகம் இல்லாத திமுக, அதிமுக வேட்பாளர்கள்!

நடைபெற உள்ள தமிழக உள்ளாட்சித் தேர்தலில் கோவை மாநகராட்சி 22வது வார்டுக்குட்பட்ட சேரன் மாநகர் குடியிருப்பு பகுதிகளில் தபால்காரர், இறைச்சிக் கடைக்காரர் உள்ளிட்டோர் வார்டு உறுப்பினர் பதவிக்குப் போட்டியிடுகின்றனர்.


கோவை: நடைபெற உள்ள தமிழக உள்ளாட்சித் தேர்தலில் கோவை மாநகராட்சி 22வது வார்டுக்குட்பட்ட சேரன் மாநகர் குடியிருப்பு பகுதிகளில் தபால்காரர், இறைச்சிக் கடைக்காரர் உள்ளிட்டோர் வார்டு உறுப்பினர் பதவிக்குப் போட்டியிடுகின்றனர்.

இந்த வார்டில் மொத்தம் 58 குடியிருப்பு நகர்கள் உள்ளன. மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 13 ஆயிரத்து 700 ஆக உள்ளது. இந்த தேர்தலில் சுயேச்சை வேட்பாளராகத் தபால்காரர், மாரியப்பன் போட்டியிடுகிறார். இதேபோல் நாம் தமிழர் கட்சி சார்பில் சசிகுமார் என்ற இறைச்சிக் கடை நடத்தி வருபவர் போட்டியிடுகிறார்.

இவர்கள் இருவரும் மக்கள் மத்தியில் கொண்ட அறிமுகம் கூட திமுக, அதிமுக கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு இல்லை. திமுக சார்பில் கோவை பாபு என்கிற செல்வகுமார் போட்டியிடுகிறார்.

இதேபோல் அதிமுக சார்பில் சண்முகசுந்தரம் போட்டியிடுகிறார். இவர்கள் இருவரும் கட்சியினர் மத்தியில் நன்கு அறிமுகம் பெற்றவர்களாக இருந்தாலும் வாக்காளர்கள் மத்தியில் அறிமுகம் மிகக் குறைவாக உள்ள வேட்பாளர்களாக இந்த தேர்தலில் களமிறங்கியுள்ளனர்.

எனவே இந்தத் தேர்தலில் இரு வேட்பாளர்களுக்கும் அவர்கள் சார்ந்திருக்கும் கட்சியின் சின்னம் அவர்கள் பெரும் வாக்குகளில் முக்கிய பங்கு வகிக்கும் என்பதில் சந்தேகமில்லை.

மக்கள் நீதி மய்யம் சார்பில் இந்த வார்டில் போட்டியிடும் வேட்பாளரும் மக்கள் மத்தியில் அதிக அறிமுகம் இல்லாதவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

வால்பாறை அணையில் மூழ்கி 21 வயது இளைஞர் உயிரிழப்பு: தேடுதல் பணி தீவிரம்

கோவை மாவட்டம் வால்பாறை அருகே அம்பலபார அணையில் நேற்று 21 வயது இளைஞர் தனுஷ் மூழ்கி காணாமல் போனார். திருமண நிகழ்ச்சிக்கு வந...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம், குப்பை...

திருப்பூரில் கோயில் உண்டியல் உடைத்து பணம் திருட்டு; சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் தேடல்

திருப்பூர் கருவம்பாளையம் அருகே எருக்கலாங்காடு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் கோயிலில் உண்டியல் உடைத்து பணம் தி...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி...