தபால்காரர், இறைச்சிக் கடைக்காரர் சேரன்மாநகர் வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டி: மக்களிடம் அறிமுகம் இல்லாத திமுக, அதிமுக வேட்பாளர்கள்!

நடைபெற உள்ள தமிழக உள்ளாட்சித் தேர்தலில் கோவை மாநகராட்சி 22வது வார்டுக்குட்பட்ட சேரன் மாநகர் குடியிருப்பு பகுதிகளில் தபால்காரர், இறைச்சிக் கடைக்காரர் உள்ளிட்டோர் வார்டு உறுப்பினர் பதவிக்குப் போட்டியிடுகின்றனர்.


கோவை: நடைபெற உள்ள தமிழக உள்ளாட்சித் தேர்தலில் கோவை மாநகராட்சி 22வது வார்டுக்குட்பட்ட சேரன் மாநகர் குடியிருப்பு பகுதிகளில் தபால்காரர், இறைச்சிக் கடைக்காரர் உள்ளிட்டோர் வார்டு உறுப்பினர் பதவிக்குப் போட்டியிடுகின்றனர்.

இந்த வார்டில் மொத்தம் 58 குடியிருப்பு நகர்கள் உள்ளன. மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 13 ஆயிரத்து 700 ஆக உள்ளது. இந்த தேர்தலில் சுயேச்சை வேட்பாளராகத் தபால்காரர், மாரியப்பன் போட்டியிடுகிறார். இதேபோல் நாம் தமிழர் கட்சி சார்பில் சசிகுமார் என்ற இறைச்சிக் கடை நடத்தி வருபவர் போட்டியிடுகிறார்.

இவர்கள் இருவரும் மக்கள் மத்தியில் கொண்ட அறிமுகம் கூட திமுக, அதிமுக கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு இல்லை. திமுக சார்பில் கோவை பாபு என்கிற செல்வகுமார் போட்டியிடுகிறார்.

இதேபோல் அதிமுக சார்பில் சண்முகசுந்தரம் போட்டியிடுகிறார். இவர்கள் இருவரும் கட்சியினர் மத்தியில் நன்கு அறிமுகம் பெற்றவர்களாக இருந்தாலும் வாக்காளர்கள் மத்தியில் அறிமுகம் மிகக் குறைவாக உள்ள வேட்பாளர்களாக இந்த தேர்தலில் களமிறங்கியுள்ளனர்.

எனவே இந்தத் தேர்தலில் இரு வேட்பாளர்களுக்கும் அவர்கள் சார்ந்திருக்கும் கட்சியின் சின்னம் அவர்கள் பெரும் வாக்குகளில் முக்கிய பங்கு வகிக்கும் என்பதில் சந்தேகமில்லை.

மக்கள் நீதி மய்யம் சார்பில் இந்த வார்டில் போட்டியிடும் வேட்பாளரும் மக்கள் மத்தியில் அதிக அறிமுகம் இல்லாதவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கிணத்துக்கடவில் 10,000 மரக்கன்றுகள் நடவு தொடக்கம்

கிணத்துக்கடவு கொண்டம்பட்டி ஊராட்சியில் சமூக பங்களிப்பு நிதியின் கீழ் 10,000 மரக்கன்றுகள் நடும் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர...

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பிய வழக்கில் 3 காவலர்கள் பணியிடை நீக்கம்

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து தப்பிய மோசடி வழக்கு கைதிக்கு உதவியதாக இரண்டாம் நிலை காவலர் மற்றும் கார் ஓட்டுநர் கைது...

காடுவெட்டிபாளையம் பகுதியில் நாளை மின்தடை

பாப்பம்பட்டி, என்.ஜி.பாளையம், எஸ்.ஆர்.பாளையம், அன்னூர் பகுதி மற்றும் சுண்டமேடு பகுதியில் ஜூன் 15 காலை 9 மணி முதல் மாலை 4...

பட்டணம் பகுதியில் நாளை மின்தடை அறிவிப்பு

பட்டணம், பட்டணம் புதூர், கம்பன் நகர், நொய்யல் நகர், சத்யநாராயணபுரம், காரவளி சாலை, நாகமநாயக்கன்பாளையம், காவேரி நகர் மற்று...

பயனற்ற நடைபாதை மேம்பாலம்: அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் மக்கள் முற்றுகை

அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் செல்லக்கூடிய மேம்பாலம் அமைக்கக் கோரிய நிலையில், நடைபாதை மேம்பாலப் பணிகள...

கோவையில் IWMA கருத்தரங்கு: தொழிற்சாலை கழிவு மேலாண்மை குறித்து விழிப்புணர்வு

கோவையில் நடைபெற்ற தொழில்துறை கழிவு மேலாண்மை கருத்தரங்கில், தொழிற்சாலை கழிவுகள் சட்டவிரோதமாக அப்புறப்படுத்தப்படுவதைத் தடு...