நீலகிரி மாவட்டம் உதகை அருகே எல்லநள்ளி பகுதியில் உள்ள அட்டுக்கொல்லை பகுதியில் 4 வயது மதிக்கத்தக்கச் சிறுத்தை உடல் கண்டெடுக்கப்பட்டு, வனத்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நீலகிரி: நீலகிரி மாவட்டம் உதகை அருகே எல்லநள்ளி பகுதியில் உள்ள அட்டுக் கொல்லை பகுதியில் 4 வயது மதிக்கத்தக்கச் சிறுத்தை உடல் கண்டெடுக்கப்பட்டு, வனத்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நீலகிரி மாவட்டம் உதகை அருகே உள்ள எல்ல நள்ளி பகுதியில் உள்ள அட்டுக் கொல்லை கிராமத்தில் சிறுத்தையொன்று இறந்து கிடப்பதாக அப்பகுதி மக்கள் வனத்துறைக்கு தகவர் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்குச் சென்ற வனத்துறையினர் சிறுத்தையின் உடலை மீட்டு அங்கேயே பிரேதப் பரிசோதனை செய்து எரித்தனர்.
இதுகுறித்து வனத்துறையினர் தெரிவிக்கையில், 4 வயது மதிக்கத்தக்கச் சிறுத்தை இறந்துள்ளதாக முதல்கட்ட தகவல் தெரிவித்தனர்.
பின்பு பிரேதப் பரிசோதனைக்குப் பின் சிறுத்தை இறந்ததற்குக் காரணம் தெரியவரும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.