திமுக வேட்பாளர்களை ஆதரித்து, கோவையில் அமைச்சர் செந்தில் பாலாஜி தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றார். அதன்படி, இன்று ராஜவீதி, செல்வபுரம் உள்ளிட்ட பகுதிகளில் திமுக வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரித்தார்.
கோவை: கோவை மாநகராட்சி தேர்தல் வருகிற 19ம் தேதி நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தீவிரமாகப் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக, திமுக வேட்பாளர்களை ஆதரித்து, கோவையில் தமிழக மின்சாரம் மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றார்.
அதன்படி, இன்று ராஜவீதி, செல்வபுரம் உள்ளிட்ட பகுதிகளில் திமுக வேட்பாளர்களை ஆதரித்து அவர் பிரச்சாரம் மேற்கொண்டார்.
கோவை ராஜவீதியில் திமுக வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட அவர், திமுக அரசின் நலத்திட்டங்களை எடுத்துக் கூறி, மக்களிடம் ஆதரவு கோரினார்.
பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, "கடந்த கால ஆட்சியில், கோவை மாநகராட்சியில் பல்வேறு பிரச்சனைகள் இருந்து வந்ததாகச் சுட்டிக்காட்டிய அவர், திமுக கூட்டணி ஆட்சி அமைந்தால், கோவை மாநகராட்சியில் தூய்மையான நிர்வாகம் அமைக்கப்படும், என்று உறுதியளித்தார்.
மேலும், வீடுகள் கட்டுவதற்கு மக்கள் எதிர்கொண்டு வந்த அனுமதி கிடைக்காத நிலை மாற்றப்படும் எனவும், விரைவாக வீடு கட்ட ஒப்புதல் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
பிரச்சாரத்தின் போது, அவருக்கு திமுக மகளிர் அணியினர் சால்வை அணிவிக்க வந்த போது, பெண் குழந்தை ஒன்றைக் கையில் வாங்கிக் கொண்டு, அவர்களின் வாழ்த்துக்களைப் பெற்றுக்கொண்டார்.