வாரத்துக்கு ஒருமுறை வார்டு மக்களை சந்தித்து மக்களின் குறைகளை மனுவாக பெற்று, அவர்களின் மனுக்களுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார்.
கோவை: கோவையில் 34வது வார்டில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர் மகேஸ்வரன் ஆர்மோனியம் இசைத்தபடி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
நகர்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19ம் தேதி நடைபெறும் நிலையில், அரசியல் கட்சிகளும், சுயேட்சை வேட்பாளர்களும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் கோவை அரசியல் களம் திருவிழாக்கோலம் கொண்டுள்ளது. அதனை தொடர்ந்து பலரும் வாக்கு சேகரிப்பில் அனைத்து வேட்பாளர்களும் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், 34வது வார்டில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர் மகேஸ்வரன் ஆர்மோனியம் இசைத்தபடி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். கண்ணப்பநகர் பகுதியில் வீடுவீடாக சென்று வாக்கு சேகரித்த இவர், தூய்மை பணியாளர்களிடம் அவர்களுக்கு தேவையானவற்றை செய்து தருவதாக உறுதி அளித்தார்.
மேலும், தெருவிளக்குகள் இல்லாத பகுதிகளுக்கு தெருவிளக்கு அமைத்து தருவதாகவும், பகுதிகளில் தேங்கும் குப்பைகளை உடனடியாக அகற்றுவதாகவும், வாரத்துக்கு ஒருமுறை வார்டு மக்களை சந்தித்து மக்களின் குறைகளை மனுவாக பெற்று அவர்களின் மனுக்களுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார்.