கோவை சிவானந்தா காலனி பகுதியில் கார் மோதியதில் மாற்றுத்திறனாளி சம்பவ இடத்திலேயே பலி..!

சிவானந்தா காலனி பகுதியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளியான நடராஜன் (66), நான்கு சக்கர தள்ளுவண்டியில் சென்று கொண்டிருந்த போது, இரயில்வே பாலத்தின் கீழ் வந்து கொண்டிருந்த போது, கார் மோதியதில் தூக்கி வீசப்பட்டார்.



கோவை: கோவை சிவானந்தாகாலனி பகுதியில் திமுக கொடி பொருத்திய கார் மோதியதில் மாற்றுத்திறனாளி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.



கோவை சிவானந்தா காலனி அருகேயுள்ள கண்ணப்ப நகர் பகுதியைச் சேர்ந்தவர் நடராஜன் (66). மாற்றுத்திறனாளியான இவர், நான்கு சக்கர தள்ளுவண்டியில் சென்ற இரயில்வே பாலத்தின் கீழ் வந்து கொண்டிருந்த போது, திமுக கட்சி கொடி பொருத்திய கார் ஒன்று அவர் மீது மோதியது. 



இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த நடராஜன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதையடுத்து, அங்கு திரண்ட அவரது உறவினர்கள், விபத்தை ஏற்படுத்திய கட்சி (திமுக) கொடி கட்டியபடி வந்த பார்ட்சூனர் காரில் இருந்த ஓட்டுனர் குபேரசம்பத் என்பவரை அடித்து உதைத்து காவல்துறையில் ஒப்படைத்தனர்.

பின்னர், சம்பவ இடத்திற்கு வந்த ரத்தினபுரி போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் அந்த கார் ஆர்.எஸ்.புரம் பகுதியைச் சேர்ந்த பன்னீர்செல்வம் என்பவரது மனைவி உமாமகேஸ்வரி என்பவருக்கு சொந்தமானது என்பதும், சர்வீஸ் விடுவதற்காக ஓட்டுனர் காரை எடுத்து சென்ற போது விபத்து நிகழ்ந்ததும் தெரியவந்துள்ளது.



இதனிடையே, இது குறித்த தகவலறிந்து அங்கு வந்த கோவை வடக்கு தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் அம்மன் அர்ச்சுனன், உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். 



இச்சம்பவம் தொடர்பாக போலீசார் தற்போது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனையடுத்து, காவல்துறையினர் ஓட்டுநரை விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். மேலும், காரையும் பறிமுதல் செய்து எடுத்துச் சென்றனர்.

Newsletter

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி கோவை காவல் ஆணையரிடம் தவெக மகளிர் அணி புகார்

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து பேசியதாகக் கூறி, உதயநிதி மீது சட்டரீதியான நடவ...

கேஎம்சிஹெச்சில் உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர் திறப்பு விழா

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் ஆகஸ்ட் 2ம் தேதி 'லைஃப் ஆப்டர் லைஃப் 2026' விழாவும், உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர்...

சித்தாபுதூர் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளி ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை சித்தாபுதூரில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் ஜூலை 31ஆம் தேதி சிற...

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...