பொள்ளாச்சி அருகே 17 வயது சிறுமியை திருமணம் செய்த வாலிபர் போக்சோவில் கைது..!

பின்னர், சிறுமியை திருமணம் செய்த வாலிபரை கோவை மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.



கோவை: பொள்ளாச்சி அருகே 17 சிறுமியை திருமணம் செய்த வாலிபர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.

ஆனைமலை அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுமி, கடந்த 2021ம் ஆண்டு, ஏப்ரல் மாதம் 21ம் தேதி காணவில்லை என்று அவரது பெற்றோர்கள் ஆழியாறு காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.

புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் சிறுமியை தேடி வந்த நிலையில், சிறுமியை கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த சிவா(20) என்பவர், அழைத்து சென்று திருமணம் செய்தது தெரியவந்தது.

இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இவர் சிறுமியை அழைத்துக் கொண்டு ஆனைமலை அருகே உள்ள கிராமத்திற்கு வந்ததாக தகவல் கிடைத்தது. இதையடுத்து, அங்கு சென்ற போலீசார் சிறுமியை மீட்டனர்.

மேலும் சிறுமியை திருமணம் செய்த இளைஞர் மீது, போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். பின்னர், அவரை கோவை மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

வால்பாறை அணையில் மூழ்கி 21 வயது இளைஞர் உயிரிழப்பு: தேடுதல் பணி தீவிரம்

கோவை மாவட்டம் வால்பாறை அருகே அம்பலபார அணையில் நேற்று 21 வயது இளைஞர் தனுஷ் மூழ்கி காணாமல் போனார். திருமண நிகழ்ச்சிக்கு வந...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம், குப்பை...

திருப்பூரில் கோயில் உண்டியல் உடைத்து பணம் திருட்டு; சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் தேடல்

திருப்பூர் கருவம்பாளையம் அருகே எருக்கலாங்காடு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் கோயிலில் உண்டியல் உடைத்து பணம் தி...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி...