பின்னர், சிறுமியை திருமணம் செய்த வாலிபரை கோவை மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
கோவை: பொள்ளாச்சி அருகே 17 சிறுமியை திருமணம் செய்த வாலிபர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.
ஆனைமலை அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுமி, கடந்த 2021ம் ஆண்டு, ஏப்ரல் மாதம் 21ம் தேதி காணவில்லை என்று அவரது பெற்றோர்கள் ஆழியாறு காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.
புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் சிறுமியை தேடி வந்த நிலையில், சிறுமியை கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த சிவா(20) என்பவர், அழைத்து சென்று திருமணம் செய்தது தெரியவந்தது.
இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இவர் சிறுமியை அழைத்துக் கொண்டு ஆனைமலை அருகே உள்ள கிராமத்திற்கு வந்ததாக தகவல் கிடைத்தது. இதையடுத்து, அங்கு சென்ற போலீசார் சிறுமியை மீட்டனர்.
மேலும் சிறுமியை திருமணம் செய்த இளைஞர் மீது, போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். பின்னர், அவரை கோவை மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.