விசைத்தறி உரிமையாளர்கள் 31வது நாளாக வேலை நிறுத்தம்..! திருப்பூர் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடந்த முத்தரப்பு பேச்சுவார்த்தை தோல்வி..!!

வேலை நிறுத்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்து தங்களுக்கு கூலி உயர்வு பெற்றுத் தர வேண்டும் என விசைத்தறி உரிமையாளர்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.


கோவை: கூலி உயர்வு கோரி விசைத்தறி உரிமையாளர்கள் 31வது நாளாக வேலை நிறுத்தம் நடைபெற்று வரும் நிலையில், மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது.

திருப்பூர், கோவை மாவட்ட விசைத்தறி உரிமையாளர்கள் கூலி உயர்வு கோரி கடந்த ஜனவரி மாதம் 9ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை துவங்கினர்.

31வது நாளாக வேலை நிறுத்தம் நடைபெற்று வரும் நிலையில், 1800 கோடி ரூபாய் மதிப்பிலான ஜவுளி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. 4 லட்சம் தொழிலாளர்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் வேலை வாய்ப்பை இழந்துள்ளனர்.

வேலை நிறுத்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்து தங்களுக்கு கூலி உயர்வு பெற்றுத் தர வேண்டும் என விசைத்தறி உரிமையாளர்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.

இந்நிலையில், திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஜவுளி உற்பத்தியாளர்கள், விசைத்தறி உரிமையாளர்கள் மற்றும் அரசு தரப்பு என முத்தரப்பு பேச்சுவார்த்தை மாவட்ட ஆட்சியர் வினித் தலைமையில் நடைபெற்றது.



சுமார் 8 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற பேச்சுவார்த்தையில் கூலி உயர்வை வழங்க ஜவுளி உற்பத்தியாளர்கள் ஒப்புதல் தெரிவிக்காததால் முடிவு எட்டப்படாமல் கூலி உயர்வு பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.

இதனையடுத்து, செய்தியாளர்களை சந்தித்த சோமனூர் விசைத்தறி உரிமையாளர்கள் சங்க தலைவர் பழனிச்சாமி கூறுகையில், கடந்த 2014ம் ஆண்டுக்கு பிறகு கூலி உயர்வு வழங்கப்படாமல் இருப்பதாகவும், அனைத்து மூலப்பொருட்கள் மற்றும் அடிப்படை பொருட்களின் விலையும் பல மடங்கு உயர்ந்துள்ளது.



ஆனால், நியாயமான கூலி உயர்வை வழங்க ஜவுளி உற்பத்தியாளர்கள் மறுப்பதாகவும், பேச்சுவார்த்தை தோல்வி அடைந்துள்ளதால் வேலை நிறுத்த போராட்டம் தொடரும் எனவும் அடுத்த கட்ட போராட்டம் குறித்து கூட்டுக்கமிட்டி கூட்டத்தில் கலந்தாலோசித்து அறிவிக்கப்படும் என தெரிவித்தார்.

Newsletter

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி கோவை காவல் ஆணையரிடம் தவெக மகளிர் அணி புகார்

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து பேசியதாகக் கூறி, உதயநிதி மீது சட்டரீதியான நடவ...

கேஎம்சிஹெச்சில் உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர் திறப்பு விழா

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் ஆகஸ்ட் 2ம் தேதி 'லைஃப் ஆப்டர் லைஃப் 2026' விழாவும், உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர்...

சித்தாபுதூர் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளி ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை சித்தாபுதூரில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் ஜூலை 31ஆம் தேதி சிற...

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...