கோவை மாநகராட்சி வாக்கு எண்ணிக்கை மையத்தில் நடைபெற்றுவரும் முன்னேற்பாடுகளை நேரில் ஆய்வு செய்த தேர்தல் பார்வையாளர். மேலும், பாதுகாப்பு அறையில் பொருத்தப்பட உள்ள சிசிடிவி கேமரா அமைக்கும் பணிகள் குறித்து கேட்டறிந்தார்.
கோவை: கோவை மாநகராட்சி வாக்கு எண்ணிக்கை மையத்தில் நடைபெற்றுவரும் முன்னேற்பாடுகளை நேரில் ஆய்வு செய்த தேர்தல் பார்வையாளர்.
தமிழகம் முழுவதும் வருகின்ற 19ஆம் தேதி ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது அதனைத் தொடர்ந்து 22ஆம் தேதி அன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
கோவை மாநகராட்சியில் 100 வார்டுகளுக்கும், தடாகம் சாலையில் உள்ள அரசினர் தொழில்நுட்பக் கல்லூரியில் வாக்கு எண்ணிக்கை மையமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அந்த வாக்கு எண்ணும் மையத்தை தேர்தல் பார்வையாளர் ஹர் சஹாய் மீனா, மாவட்ட ஆட்சியர் சமீரன், மாநகராட்சி ஆணையாளர் ராஜகோபால் சுன்கரா, காவல் ஆணையாளர் பிரதீப் குமார் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.
அங்கு அமைக்கப்பட்டுள்ள, வாக்கு எண்ணிக்கை அறை, பாதுகாப்பு அறை, அறையின் கதவுகள் ஆகியவற்றை ஆய்வு மேற்கொண்டனர்.
மேலும், பாதுகாப்பு அறையில் பொருத்தப்பட உள்ள சிசிடிவி கேமரா அமைக்கும் பணிகள் குறித்து கேட்டறிந்தார்.