கோவையில் இன்று பிரச்சனைக்குரிய வாக்குச்சாவடிகளை டிஐஜி முத்துசாமி பார்வையிட்டு, பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து விசாரித்து அறிவுரைகளை வழங்கினார்.
கோவை: கோவையில் இன்று பிரச்சனைக்குரிய வாக்குச்சாவடிகளை டிஐஜி முத்துசாமி பார்வையிட்டார்.
கோவையில் இன்று கோவை சரக காவல் டிஐஜி முத்துசாமி தலைமையில், மற்றும் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம் ஆகியோர் முன்னிலையில் பேரூர் கோட்டத்தில் உள்ள கிணத்துக்கடவு, மதுக்கரை, காக்கா சாவடி, பேரூர், ஆலந்துறை, காருண்யா நகர், தொண்டாமுத்தூர், வடவள்ளி ஆகிய காவல் நிலையங்களில் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் 2022 தொடர்பாகச் சட்ட ஒழுங்கு ஆலோசனைக் கூட்டம் வடவள்ளி காவல் நிலையத்தில் வைத்து நடைபெற்றது.

அதன் பின்னர் மருதமலை சுப்பிரமணிய சுவாமி தேவஸ்தான மேல்நிலைப்பள்ளியில் உள்ள வாக்குச் சாவடிகள் மற்றும் வாக்கு எண்ணும் மையங்களைப் பார்வையிட்ட பின்பு காவல்துறை துணைத்தலைவர் நகராஜபுரம், நம்பி அழகன் பாளையம், தாளியூர், அட்டுகள், கெம்பனூர். தொண்டாமுத்தூர், பூலுவபட்டி, பலயம்கொட்டை, சுண்டக்காமுத்தூர், அறிவொளி நகர் ஆகிய இடங்களில் உள்ள பிரச்சினைக்குரிய வாக்குச்சாவடிகளிலும் பார்வையிட்டுப் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து விசாரித்து அறிந்து கொண்டார்.
கோவையில் இன்று கோவை சரக காவல் டிஐஜி முத்துசாமி தலைமையில், மற்றும் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம் ஆகியோர் முன்னிலையில் பேரூர் கோட்டத்தில் உள்ள கிணத்துக்கடவு, மதுக்கரை, காக்கா சாவடி, பேரூர், ஆலந்துறை, காருண்யா நகர், தொண்டாமுத்தூர், வடவள்ளி ஆகிய காவல் நிலையங்களில் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் 2022 தொடர்பாகச் சட்ட ஒழுங்கு ஆலோசனைக் கூட்டம் வடவள்ளி காவல் நிலையத்தில் வைத்து நடைபெற்றது.
அதன் பின்னர் மருதமலை சுப்பிரமணிய சுவாமி தேவஸ்தான மேல்நிலைப்பள்ளியில் உள்ள வாக்குச் சாவடிகள் மற்றும் வாக்கு எண்ணும் மையங்களைப் பார்வையிட்ட பின்பு காவல்துறை துணைத்தலைவர் நகராஜபுரம், நம்பி அழகன் பாளையம், தாளியூர், அட்டுகள், கெம்பனூர். தொண்டாமுத்தூர், பூலுவபட்டி, பலயம்கொட்டை, சுண்டக்காமுத்தூர், அறிவொளி நகர் ஆகிய இடங்களில் உள்ள பிரச்சினைக்குரிய வாக்குச்சாவடிகளிலும் பார்வையிட்டுப் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து விசாரித்து அறிந்து கொண்டார்.