கோவையில் இரு பிரிவினர்களுக்கு இடையே அடுத்தடுத்து மோதல்: போலீசார் குவிப்பு

கோவை அருகே அடுத்தடுத்து ஏற்பட்ட மோதல் காரணமாக ஜாதிகலவரம் ஏற்படும் சூழலால் பதட்டமான நிலையில், போலீஸ் குவிக்கப்பட்டு உள்ளனர்.



கோவை: கோவை அருகே அடுத்தடுத்து ஏற்பட்ட மோதல் காரணமாக ஜாதிகலவரம் ஏற்படும் சூழலால் பதட்டமான நிலையில், போலீஸ் குவிக்கப்பட்டு உள்ளனர்.

கோவை பாப்பம்பட்டி, பொன்னாக்காணி பகுதியில் நேற்று இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டு இருந்த பால்காரரை குடிபோதையில் அதே பகுதியைச் சேர்ந்த ஒருவர் தள்ளிவிட்டதாகத் தெரிகிறது.

இதையடுத்து, பால்காரரின் மருமகன் தட்டிக்கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த குடிகாரர் நேற்று இரவு பால்காரரின் மகள் மற்றும் மாமியாரைக் கடுமையாகத் தாக்கியுள்ளார்.

இன்று அதே பகுதியைச் சேர்ந்த வேறொருவர் சம்பவம் குறித்துக் கேட்கச் சென்றபோது இரும்புக் கம்பியால் தாக்கப்பட்டு படுகாயம் அடைந்த அவரை கோவை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், பாப்பம்பட்டி, பொன்னாக்காணியில் பலத்த போலிசார் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளது.

பால்காரர் காளியப்பகவுண்டர், அவருடைய மகள் கோகிலாமணிக்கு கால்முறிவு, மாமியார் மயிலாத்தால், மண்டை உடைந்துள்ளது.

கோகிலாமணியின் மாமன் மகன் பழனிச்சாமி, தனியார் மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் உள்ளார். குடிபோதையில் தாக்கிய, கேசவன், அப்பா செல்வகுமார், மகன், தலைமறைவாக உள்ளனர்.

Newsletter

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி கோவை காவல் ஆணையரிடம் தவெக மகளிர் அணி புகார்

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து பேசியதாகக் கூறி, உதயநிதி மீது சட்டரீதியான நடவ...

கேஎம்சிஹெச்சில் உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர் திறப்பு விழா

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் ஆகஸ்ட் 2ம் தேதி 'லைஃப் ஆப்டர் லைஃப் 2026' விழாவும், உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர்...

சித்தாபுதூர் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளி ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை சித்தாபுதூரில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் ஜூலை 31ஆம் தேதி சிற...

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...