கோவையில் இரு பிரிவினர்களுக்கு இடையே அடுத்தடுத்து மோதல்: போலீசார் குவிப்பு

கோவை அருகே அடுத்தடுத்து ஏற்பட்ட மோதல் காரணமாக ஜாதிகலவரம் ஏற்படும் சூழலால் பதட்டமான நிலையில், போலீஸ் குவிக்கப்பட்டு உள்ளனர்.



கோவை: கோவை அருகே அடுத்தடுத்து ஏற்பட்ட மோதல் காரணமாக ஜாதிகலவரம் ஏற்படும் சூழலால் பதட்டமான நிலையில், போலீஸ் குவிக்கப்பட்டு உள்ளனர்.

கோவை பாப்பம்பட்டி, பொன்னாக்காணி பகுதியில் நேற்று இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டு இருந்த பால்காரரை குடிபோதையில் அதே பகுதியைச் சேர்ந்த ஒருவர் தள்ளிவிட்டதாகத் தெரிகிறது.

இதையடுத்து, பால்காரரின் மருமகன் தட்டிக்கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த குடிகாரர் நேற்று இரவு பால்காரரின் மகள் மற்றும் மாமியாரைக் கடுமையாகத் தாக்கியுள்ளார்.

இன்று அதே பகுதியைச் சேர்ந்த வேறொருவர் சம்பவம் குறித்துக் கேட்கச் சென்றபோது இரும்புக் கம்பியால் தாக்கப்பட்டு படுகாயம் அடைந்த அவரை கோவை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், பாப்பம்பட்டி, பொன்னாக்காணியில் பலத்த போலிசார் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளது.

பால்காரர் காளியப்பகவுண்டர், அவருடைய மகள் கோகிலாமணிக்கு கால்முறிவு, மாமியார் மயிலாத்தால், மண்டை உடைந்துள்ளது.

கோகிலாமணியின் மாமன் மகன் பழனிச்சாமி, தனியார் மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் உள்ளார். குடிபோதையில் தாக்கிய, கேசவன், அப்பா செல்வகுமார், மகன், தலைமறைவாக உள்ளனர்.

Newsletter

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

வால்பாறை அணையில் மூழ்கி 21 வயது இளைஞர் உயிரிழப்பு: தேடுதல் பணி தீவிரம்

கோவை மாவட்டம் வால்பாறை அருகே அம்பலபார அணையில் நேற்று 21 வயது இளைஞர் தனுஷ் மூழ்கி காணாமல் போனார். திருமண நிகழ்ச்சிக்கு வந...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம், குப்பை...

திருப்பூரில் கோயில் உண்டியல் உடைத்து பணம் திருட்டு; சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் தேடல்

திருப்பூர் கருவம்பாளையம் அருகே எருக்கலாங்காடு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் கோயிலில் உண்டியல் உடைத்து பணம் தி...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி...