கோவில்பாளையம் பேருந்து நிறுத்தம் அருகே வெளிமாநில லாட்டரி சீட்டை விற்பனை செய்தவரை போலீசார் கைது செய்தனர்.
கோவை: கோவை கிணத்துக்கடவு அருகே வெளிமாநில லாட்டரி சீட்டு விற்பனை செய்தவர் கைது செய்யப்பட்டார்.
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள கோவில்பாளையம் பகுதியில் கிணத்துக்கடவு போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
அப்போது, கோவில்பாளையம் பேருந்து நிறுத்தம் அருகே ஒரு நபர் வெளிமாநில லாட்டரி சீட்டை விற்பனை செய்து கொண்டிருந்தார்.
அந்த நபரை பிடித்து விசாரணை செய்ததில் கோவில்பாளையம் காளியண்ணன்புதூரை சேர்ந்த வீரன் (50) என்பது தெரியவந்தது.
இதையடுத்து, வெளிமாநில லாட்டரி சீட்டு விற்பனை செய்த வீரனை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து வெளிமாநில லாட்டரி சீட்டுகளையும் பறிமுதல் செய்துள்ளனர்.