குன்னூர் மலை ரயில் பாதையில், யானை வழித்தடத்தில் கட்டப்பட்டு இருந்த, தடுப்பு சுவரை இடிக்கும் பணி நடந்து வருகிறது.
நீலகிரி: குன்னூர் மலை ரயில்பாதையில், யானை வழித்தடத்தில் கட்டப்பட்டு இருந்த, தடுப்பு சுவரை இடிக்கும் பணி நடந்து வருகிறது.
நீலகிரி மாவட்டம், குன்னூர்- மேட்டுப்பாளையம் ரயில் பாதையில், ரயில்வே பொதுப்பணி துறை சார்பில் புதிய தடுப்பு சுவர் கட்டப்பட்டு வருகிறது.
இதில், ஹில்குரோவ் ரயில்நிலையம் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்ற, ஒன்பது யானைகள், புதிய தடுப்பு சுவரால் சிரமப்பட்டன.
இந்த நிலையில், வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை முதன்மை செயலர் சுப்ரியா சாஹூ அறிவுறுத்தியதன் அடிப்படையில், அப்பகுதியில் தடுப்பு சுவர் இடிக்கப்பட்டது.
கடந்த இரு நாட்களுக்கு முன், தலைமை முதன்மை வனப்பாதுகாவலர் சேகர் குமார் நீரஜ் தலைமையில் நடத்திய ஆய்வில், யானை வழித்தடங்களில் உள்ள, மேலும் சில தடுப்பு சுவர்களை இடிக்க உத்தரவிடப்பட்டது.
இதையடுத்து, நேற்று வடுக தோட்டம் பகுதியில் இரு இடங்களில் அமைத்த தடுப்புச்சுவர்களை, ரயில்வே துறையினர் இடித்தனர்.
நீலகிரி மாவட்டம், குன்னூர்- மேட்டுப்பாளையம் ரயில் பாதையில், ரயில்வே பொதுப்பணி துறை சார்பில் புதிய தடுப்பு சுவர் கட்டப்பட்டு வருகிறது.
இதில், ஹில்குரோவ் ரயில்நிலையம் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்ற, ஒன்பது யானைகள், புதிய தடுப்பு சுவரால் சிரமப்பட்டன.
இந்த நிலையில், வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை முதன்மை செயலர் சுப்ரியா சாஹூ அறிவுறுத்தியதன் அடிப்படையில், அப்பகுதியில் தடுப்பு சுவர் இடிக்கப்பட்டது.
கடந்த இரு நாட்களுக்கு முன், தலைமை முதன்மை வனப்பாதுகாவலர் சேகர் குமார் நீரஜ் தலைமையில் நடத்திய ஆய்வில், யானை வழித்தடங்களில் உள்ள, மேலும் சில தடுப்பு சுவர்களை இடிக்க உத்தரவிடப்பட்டது.
இதையடுத்து, நேற்று வடுக தோட்டம் பகுதியில் இரு இடங்களில் அமைத்த தடுப்புச்சுவர்களை, ரயில்வே துறையினர் இடித்தனர்.