பொள்ளாச்சி அருகே கூலி தொழிலாளியை கட்டையால் தாக்கி கொன்றவர் கைது

பொள்ளாச்சி அருகே மது அருந்தச் சென்ற இடத்தில், இருவருக்கும் ஏற்பட்ட தகராற்றில், கூலி தொழிலாளியைக் கட்டையால் தாக்கி கொன்றவர் கைது செய்யப்பட்டார்.


கோவை: பொள்ளாச்சி அருகே மது அருந்தச் சென்ற இடத்தில், இருவருக்கும் ஏற்பட்ட தகராற்றில், கூலி தொழிலாளியைக் கட்டையால் தாக்கி கொன்றவர் கைது செய்யப்பட்டார்.

பொள்ளாச்சி அருகே உள்ள கோட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் மகாலிங்கம் (34), தேங்காய் உறிக்கும் தொழிலாளி. இவர் கடந்த 5-ம் தேதி திவான்சாபுதூர் அருகே தனியார் தோட்டத்தில் தேங்காய் உறிக்கும் பணிக்குச் சென்றார்.

இந்நிலையில், பணியை முடித்த பிறகு இரவு அதே தோட்டத்தில் பணிக்கு வந்த உடுமலையைச் சேர்ந்த செல்வராஜ் (40) என்பவருடன் மது அருந்தச் சென்றதாகக் கூறப்படுகிறது.

அங்கு இருவருக்கும் ஏற்பட்டதகராற்றில், செல்வராஜ் மகாலிங்கத்தைக் கட்டையால் தாக்கி விட்டு தப்பி ஓடியதாகத் தெரிகிறது. இதில், மகாலிங்கம் உயிரிழந்தார். இதையடுத்து, சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த ஆனைமலை போலீசார் தப்பி ஓடிய செல்வராஜை தேடி வந்தனர்.

இந்நிலையில், ஆலங்கடவு அருகே வைத்து செல்வராஜை நேற்று போலீசார் கைது செய்தனர். பின், விசாரணையில் குடி போதையிலிருந்த போது மகாலிங்கம் செல்வராஜை தள்ளி விட்டதாகவும், இதில் ஆத்திரமடைந்த செல்வராஜ் அருகிலிருந்த கட்டையை எடுத்து மகாலிங்கத்தைத் தாக்கியதில், அவர் உயிரிழந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து செல்வராஜ் மீது கொலை வழக்குப்பதிவு செய்து, அவரை சிறையில் அடைக்கும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

Newsletter

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி கோவை காவல் ஆணையரிடம் தவெக மகளிர் அணி புகார்

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து பேசியதாகக் கூறி, உதயநிதி மீது சட்டரீதியான நடவ...

கேஎம்சிஹெச்சில் உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர் திறப்பு விழா

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் ஆகஸ்ட் 2ம் தேதி 'லைஃப் ஆப்டர் லைஃப் 2026' விழாவும், உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர்...

சித்தாபுதூர் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளி ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை சித்தாபுதூரில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் ஜூலை 31ஆம் தேதி சிற...

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...