பிரச்சாரம் செய்யும் போது, இனி ஒரு முறை கைது நடவடிக்கை மேற்கொண்டால், தேர்தல் ஆணையத்தில் முறையிடுவேன் - கோவையில் பாஜக வேலூர் இப்ராஹிம்

கோவையில் 2-வது நாளாக பிரச்சாரத்தின் போது கைது செய்யப்பட்ட, பாஜக வேலூர் இப்ராஹிம், தன்னை இனி ஒரு முறை கைது செய்தால் தேர்தல் ஆணையத்தில் முறையிடுவதாக தெரிவித்துள்ளார்.


கோவை: கோவையில் பிரச்சாரம் செய்யும் போது, இனி ஒரு முறை கைது நடவடிக்கை மேற்கொண்டால், தேர்தல் ஆணையத்தில் முறையிடுவேன் என்று பாஜகவின் சிறுபான்மை அணியின் செயலாளர், வேலூர் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

கோவையில் 2-வது நாளாக பிரச்சாரத்தின் போது கைது செய்யப்பட்ட, பாஜக வேலூர் இப்ராஹிம், தன்னை இனி ஒரு முறை கைது செய்தால் தேர்தல் ஆணையத்தில் முறையிடுவதாக தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் 19 ஆம் தேதி நடைபெற உள்ள நகர்புற உள்ளாட்சி தேர்தலுக்கு, பாஜகவின் சிறுபான்மை பிரிவு தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம், கோவையில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.

அதன்படி, இன்று கோவை போத்தனூர் பகுதி 95 வது வார்டில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அப்பகுதியில் உள்ள ஒரு தரப்பு இஸ்லாமியர்கள், வேலூர் இப்ராஹிம் பிரச்சாரத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து அங்கு பரபரப்பான சூழல் நிலவியதால், போலீசார் பாதுகாப்புக் கருதி, அவரை பிரச்சாரத்தை கைவிடும்படி அறிவுறுத்தினர்.



ஆனால், போலீசாரிடம், வேலூர் இப்ராஹிம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், அவரை போலீசார் அங்கிருந்து அப்புறப்படுத்தி ராமநாதபுரம் காவல் நிலையம் அழைத்துச் சென்று, பின்னர் மாலை வரை காவல் நிலையத்தில் வைத்திருந்து வெளியே விட்டனர்.

நேற்றும், பிரச்சாரத்தின் போது எஸ்.டி. பி.ஐ கட்சியினர் மற்றும் இஸ்லாமியர்கள் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து, அவர் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், நேற்று, இன்று என இரு நாட்கள் பிரச்சாரத்தின் போது போலீசார் அவரை கைது செய்து விடுவித்த சம்பவம் பாஜகவினர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து பேசிய வேலூர் இப்ராஹிம், அரசியலமைப்பு சட்டப்படி தேர்தல் பிரச்சாரம் செய்து வருவதாகவும், 95 வது வார்டில் சிறுபான்மை மக்களை அணுகி, பாஜக சிறுபான்மை மக்களுக்கு என்ன செய்துள்ளது, என்பதை தெரிவித்து வாக்கு சேகரித்து அங்கு சென்றதாக தெரிவித்தார்.

ஸ்டாலின் முதல்வர் என்பதை மறந்து பாஜகவிற்கு எதிராக விஷமமாக பிரச்சாரம் செய்து வருவதாக தெரிவித்தார். பாஜகவினர் எங்கு சென்றாலும் காவல் துறையினரை வைத்து பிரசாரத்தை முடங்குகின்றனர், என்று குற்றம் சாட்டினார்.

சிறுபான்மை மக்கள் மத்தியில் பாஜகவின் திட்டங்களை தெரிவித்தால் திமுகவை புறக்கணிப்பார்கள் என்ற அச்சத்தில் பிரச்சாரத்தை தடுக்கிறார்கள் என கூறிய அவர் இந்துக்கள், கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் இணைந்து பாஜகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்வது திமுகவிற்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்தார்.

இனிமேலும் நாங்கள் தொடர்ந்து கைது செய்யப்பட்டால், தேர்தல் ஆணையத்திடம் மற்றும் மக்கள் மன்றத்திலும் முறையிடுவோம், என்று தெரிவித்தார்.

Newsletter

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

வால்பாறை அணையில் மூழ்கி 21 வயது இளைஞர் உயிரிழப்பு: தேடுதல் பணி தீவிரம்

கோவை மாவட்டம் வால்பாறை அருகே அம்பலபார அணையில் நேற்று 21 வயது இளைஞர் தனுஷ் மூழ்கி காணாமல் போனார். திருமண நிகழ்ச்சிக்கு வந...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம், குப்பை...

திருப்பூரில் கோயில் உண்டியல் உடைத்து பணம் திருட்டு; சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் தேடல்

திருப்பூர் கருவம்பாளையம் அருகே எருக்கலாங்காடு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் கோயிலில் உண்டியல் உடைத்து பணம் தி...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி...