கோவையில் மயங்கி இருந்த யானைக்கு இரண்டாவது நாளாக சிகிச்சை

கோவை பெரியதடாகம் பகுதியில், மயங்கி இருந்த பெண் யானைக்கு இரண்டாவது நாளாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நீர் சத்தை அதிகரிக்கத் தொடர்ந்து, குளுக்கோஸ், பழங்கள், வெல்லம் கலந்த சூரண குடிநீர் ஆகியவை வழங்கப்பட்டு வருகிறது.


கோவை: கோவை பெரியதடாகம் பகுதியில், மயங்கி இருந்த பெண் யானைக்கு இரண்டாவது நாளாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கோவை பெரியதடாகம் பகுதியில், பெண் யானை ஒன்று நேற்றைய தினம் மயங்கிய நிலையில், படுத்துக் கொண்டிருந்தது குறித்து வனத்துறையினர் மற்றும் கால்நடை மருத்துவர்களுக்குத் தகவல் அளிக்கப்பட்டு நேற்றிலிருந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

நேற்றைய தினம் யானையைச் சுற்றிலும் பந்தல் அமைக்கப்பட்டு குளுக்கோஸ் போடப்பட்டு பழங்கள், வெல்லம் கலந்து சூரண குடிநீர் ஆகியவை வழங்கப்பட்டன. மேலும், யானையை எழுப்ப முயன்ற போது எழுந்து நிற்காததால் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டது.

இந்நிலையில், இரண்டாவது நாளாக இன்றும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. யானையின் இரத்தம், சாணம், ஆகியவை சேகரிக்கப்பட்டு ஆய்விற்கு அனுப்பப்பட்டது. ஆய்வில் அனைத்தும் சரியான நிலையில் உள்ளதாகத் தெரிவித்ததைத் தொடர்ந்து யானைக்கு நீர் சத்தை அதிகரிக்கத் தொடர்ந்து, குளுக்கோஸ், பழங்கள், வெல்லம் கலந்த சூரண குடிநீர் ஆகியவை வழங்கப்பட்டு வருகிறது.

Newsletter

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி கோவை காவல் ஆணையரிடம் தவெக மகளிர் அணி புகார்

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து பேசியதாகக் கூறி, உதயநிதி மீது சட்டரீதியான நடவ...

கேஎம்சிஹெச்சில் உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர் திறப்பு விழா

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் ஆகஸ்ட் 2ம் தேதி 'லைஃப் ஆப்டர் லைஃப் 2026' விழாவும், உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர்...

சித்தாபுதூர் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளி ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை சித்தாபுதூரில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் ஜூலை 31ஆம் தேதி சிற...

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...