கோவை பெரியதடாகம் பகுதியில், மயங்கி இருந்த பெண் யானைக்கு இரண்டாவது நாளாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நீர் சத்தை அதிகரிக்கத் தொடர்ந்து, குளுக்கோஸ், பழங்கள், வெல்லம் கலந்த சூரண குடிநீர் ஆகியவை வழங்கப்பட்டு வருகிறது.
கோவை: கோவை பெரியதடாகம் பகுதியில், மயங்கி இருந்த பெண் யானைக்கு இரண்டாவது நாளாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கோவை பெரியதடாகம் பகுதியில், பெண் யானை ஒன்று நேற்றைய தினம் மயங்கிய நிலையில், படுத்துக் கொண்டிருந்தது குறித்து வனத்துறையினர் மற்றும் கால்நடை மருத்துவர்களுக்குத் தகவல் அளிக்கப்பட்டு நேற்றிலிருந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
நேற்றைய தினம் யானையைச் சுற்றிலும் பந்தல் அமைக்கப்பட்டு குளுக்கோஸ் போடப்பட்டு பழங்கள், வெல்லம் கலந்து சூரண குடிநீர் ஆகியவை வழங்கப்பட்டன. மேலும், யானையை எழுப்ப முயன்ற போது எழுந்து நிற்காததால் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்நிலையில், இரண்டாவது நாளாக இன்றும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. யானையின் இரத்தம், சாணம், ஆகியவை சேகரிக்கப்பட்டு ஆய்விற்கு அனுப்பப்பட்டது. ஆய்வில் அனைத்தும் சரியான நிலையில் உள்ளதாகத் தெரிவித்ததைத் தொடர்ந்து யானைக்கு நீர் சத்தை அதிகரிக்கத் தொடர்ந்து, குளுக்கோஸ், பழங்கள், வெல்லம் கலந்த சூரண குடிநீர் ஆகியவை வழங்கப்பட்டு வருகிறது.
கோவை பெரியதடாகம் பகுதியில், பெண் யானை ஒன்று நேற்றைய தினம் மயங்கிய நிலையில், படுத்துக் கொண்டிருந்தது குறித்து வனத்துறையினர் மற்றும் கால்நடை மருத்துவர்களுக்குத் தகவல் அளிக்கப்பட்டு நேற்றிலிருந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
நேற்றைய தினம் யானையைச் சுற்றிலும் பந்தல் அமைக்கப்பட்டு குளுக்கோஸ் போடப்பட்டு பழங்கள், வெல்லம் கலந்து சூரண குடிநீர் ஆகியவை வழங்கப்பட்டன. மேலும், யானையை எழுப்ப முயன்ற போது எழுந்து நிற்காததால் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்நிலையில், இரண்டாவது நாளாக இன்றும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. யானையின் இரத்தம், சாணம், ஆகியவை சேகரிக்கப்பட்டு ஆய்விற்கு அனுப்பப்பட்டது. ஆய்வில் அனைத்தும் சரியான நிலையில் உள்ளதாகத் தெரிவித்ததைத் தொடர்ந்து யானைக்கு நீர் சத்தை அதிகரிக்கத் தொடர்ந்து, குளுக்கோஸ், பழங்கள், வெல்லம் கலந்த சூரண குடிநீர் ஆகியவை வழங்கப்பட்டு வருகிறது.