புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து செந்தில்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கோவை: கோவையில் மது அருந்த பணம் தராத மனைவி, மகளை அடித்து உதைத்த தொழிலாளி சிறையில் அடைக்கப்பட்டார்.
கோவை சுக்ரவார் பேட்டை பகுதியைச் சேர்ந்த சங்கிலி ஆசாரி என்பவரின் மகன் செந்தில்குமார் (48). இவருக்கு விஜயலட்சுமி என்ற மனைவி உள்ளார். நகை பட்டறை வேலை செய்துவரும் செந்தில்குமாருக்கு குடிப்பழக்கம் உள்ளது. இதன் காரணமாக மனைவியிடம் அடிக்கடி பணம் கேட்டு தகராறு செய்வது வழக்கம்.
இந்நிலையில், நேற்று செந்தில்குமார் மது அருந்த தனது மனைவியிடம் பணம் கேட்டுள்ளார். அப்போது விஜயலட்சுமியும் அவரது மகளும் பணம் தர மறுத்ததோடு செந்தில்குமார் இடம் தகாத வார்த்தை பேசி உள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த செந்தில்குமார் மனைவி மற்றும் மகளை அடித்து உதைத்தார்.
இதில் காயமடைந்த அவர்கள் வேரைட்டி ஹால் ரோடு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து செந்தில்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கோவை சுக்ரவார் பேட்டை பகுதியைச் சேர்ந்த சங்கிலி ஆசாரி என்பவரின் மகன் செந்தில்குமார் (48). இவருக்கு விஜயலட்சுமி என்ற மனைவி உள்ளார். நகை பட்டறை வேலை செய்துவரும் செந்தில்குமாருக்கு குடிப்பழக்கம் உள்ளது. இதன் காரணமாக மனைவியிடம் அடிக்கடி பணம் கேட்டு தகராறு செய்வது வழக்கம்.
இந்நிலையில், நேற்று செந்தில்குமார் மது அருந்த தனது மனைவியிடம் பணம் கேட்டுள்ளார். அப்போது விஜயலட்சுமியும் அவரது மகளும் பணம் தர மறுத்ததோடு செந்தில்குமார் இடம் தகாத வார்த்தை பேசி உள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த செந்தில்குமார் மனைவி மற்றும் மகளை அடித்து உதைத்தார்.
இதில் காயமடைந்த அவர்கள் வேரைட்டி ஹால் ரோடு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து செந்தில்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.