அம்பராம்பாளையத்தை சேர்ந்த முருகானந்தம் என்பவரிடம் சோதனை மேற்கொண்டதில், அவர் வைத்திருந்த பையில் 2 கிலோ கஞ்சா இருப்பது கண்டறியப்பட்டது.
கோவை: பொள்ளாச்சி அம்பராம்பாளையம் அருகே இரண்டு கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், ஒருவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை, குட்கா, கஞ்சா போன்ற பொருட்களை விற்பனை செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில், கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் உத்தரவின் பேரில் ஆனைமலை ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன் உதவி ஆய்வாளர் சின்னகாமணன் மற்றும் போலீசார் அம்பராம்பாளையம் அருகே இரவு ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
அப்பொழுது அவ்வழியாக பையுடன் சென்று கொண்டு இருந்த அம்பராம்பாளையத்தை சேர்ந்த வஞ்சியப்பன் மகன் முருகானந்தம் என்பவரிடம் சோதனை மேற்கொண்டதில் அவர் வைத்திருந்த பையில் 2 கிலோ கஞ்சா இருப்பது கண்டறியப்பட்டது.
போலீசார் விசாரணையில் கஞ்சாவை விற்பனைக்காக எடுத்துச் செல்லப்பட்டது. தெரியவந்தது இதனை அடுத்து இரண்டு கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து கஞ்சா வைத்திருந்த முருகானந்தத்தை கைது செய்து ஆனைமலை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை, குட்கா, கஞ்சா போன்ற பொருட்களை விற்பனை செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில், கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் உத்தரவின் பேரில் ஆனைமலை ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன் உதவி ஆய்வாளர் சின்னகாமணன் மற்றும் போலீசார் அம்பராம்பாளையம் அருகே இரவு ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
அப்பொழுது அவ்வழியாக பையுடன் சென்று கொண்டு இருந்த அம்பராம்பாளையத்தை சேர்ந்த வஞ்சியப்பன் மகன் முருகானந்தம் என்பவரிடம் சோதனை மேற்கொண்டதில் அவர் வைத்திருந்த பையில் 2 கிலோ கஞ்சா இருப்பது கண்டறியப்பட்டது.
போலீசார் விசாரணையில் கஞ்சாவை விற்பனைக்காக எடுத்துச் செல்லப்பட்டது. தெரியவந்தது இதனை அடுத்து இரண்டு கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து கஞ்சா வைத்திருந்த முருகானந்தத்தை கைது செய்து ஆனைமலை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.