கோவையில் பெட்ரோல் நிரப்பி விட்டு பணம் கொடுக்காமல் தப்பி ஓடிய வாலிபர்கள்; சிசிடிவி காட்சிகள் வெளியீடு.

கோவை என் ஜி புதூர் அருகே உள்ள ஒரு பெட்ரோல் பங்கில், இரு சக்கர வாகனத்திற்கு ரூ.800 க்கு பெட்ரோல் அடித்து கொண்டு பணம் கொடுக்காமல் தப்பிச் சென்ற வாலிபர்களை துடியலூர் போலீசார் தேடி வருகின்றனர்.


கோவை :கோவை, கே என் ஜி புதூர் அருகே உள்ள ஒருபெட்ரோல் பங்கில், பைக்கில் வந்த இருவர், பெட்ரோல் போட்டு விட்டு தப்பி ஓடிய சம்பவம் குறித்தசிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

கோவை என் ஜி புதூர் அருகே உள்ள ஒருபெட்ரோல் பங்கில்,

மேலாளராக பணி புரிபவர் பிரபாகரன்.இவர் நேற்று இரவு 9 50 மணிக்கு பணியில் இருந்த போது, பெட்ரோல் அடிக்க இரு வாலிபர்கள் ஒரு பைக்கில் வந்துள்ளனர். அவர்கள் கூறியது போல், மனோகரன் ரூபாய் 800 க்கு இரு சக்கர வாகனத்திற்கு பெட்ரோல் அடித்துள்ளார்.



இதையடுத்து, பெட்ரோல் போட்டுவிட்டு,

பிரபாகரன் அவர்களிடம்

பணம் கேட்டபோது அந்த வாலிபர்கள் இருவரும் பணம் கொடுக்காமல் அங்கிருந்து பைக்கில் தப்பி செல்ல முயற்சித்துள்ளனர். உடனே, சுதாரித்துக்கொண்டு பிரபாகரன் அந்தமோட்டார் சைக்களின்பின் இருக்கையில் அமர்ந்திருந்தவரின் கையை பிடித்து தடுத்து நிறுத்த முயன்றார்.



பின்னர், அவர்களை பிடிக்க முடியாத பிரபாகரன், நிலைதடுமாறி அருகிலிருந்த தடுப்பில் மோதி விழுந்தார். இதுகுறித்து, அளிக்கப்பட்ட புகாரின் பேரில், துடியலூர் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பெட்ரோல் பங்கில் இருந்து எடுக்கப்பட்ட சிசிடிவி காட்சிகளை கொண்டு விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

அந்த சம்பவம் குறித்த சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Newsletter

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய மூன்று முக்கிய அணைகளின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5ஆம் தேத...

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...