பொள்ளாச்சியில் அதிமுக வேட்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம்..!

பொள்ளாச்சி அருகே உள்ள திப்பம்பட்டி எம்எல்ஏ பொள்ளாச்சி ஜெயராமன் இல்லத்தில் நடைபெற்றது.


கோவை: கோவை பொள்ளாச்சியில் அதிமுக வேட்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

அதிமுக தேர்தல் பிரிவு செயலாளரும், பொள்ளாச்சி சட்டமன்ற உறுப்பினரருமான பொள்ளாச்சி ஜெயராமன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில், பொள்ளாச்சி நகர செயலாளர் கிருஷ்ணகுமார் முன்னிலை வகித்தார்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்ட அதிமுக வேட்பாளர்களுக்கு A,B,C படிவங்கள் வழங்கப்பட்டது.



இதனையடுத்து பேசிய பொள்ளாச்சி ஜெயராமன் அதிமுக ஆட்சியில் பொள்ளாச்சி நகராட்சி பகுதியில் செய்த சாதனைகளையும், சட்டமன்ற தேர்தலின் போது பொய்யான வாக்குறுதிகளை அளித்து, ஆட்சிக்கு வந்த பிறகு வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக அரசின் பொய்ப் பிரச்சாரங்களையும் மக்களிடையே கொண்டு சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வெற்றி பெற்று பொள்ளாச்சி நகராட்சியை அதிமுக கைப்பற்ற வேண்டும் என்று பேசினார்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் விஜயகுமார், மாவட்ட மாணவரணி செயலாளர் ஜேம்ஸ்ராஜா, மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் PRK. குருசாமி, மாவட்ட பிரதிநிதிகள் அருணாச்சலம், இரும்பு குரு, நகர பொருளாளர் வருகை கனகு, அக்னீஷ் முகுந்தன், காளிமுத்து உள்ளிட்ட ஒன்றிய, நகர நிர்வாகிகளும், சார்பு அணி நிர்வாகிகள் இந்த கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

Newsletter

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி கோவை காவல் ஆணையரிடம் தவெக மகளிர் அணி புகார்

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து பேசியதாகக் கூறி, உதயநிதி மீது சட்டரீதியான நடவ...

கேஎம்சிஹெச்சில் உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர் திறப்பு விழா

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் ஆகஸ்ட் 2ம் தேதி 'லைஃப் ஆப்டர் லைஃப் 2026' விழாவும், உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர்...

சித்தாபுதூர் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளி ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை சித்தாபுதூரில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் ஜூலை 31ஆம் தேதி சிற...

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...