பொள்ளாச்சியில் ரூ.3 லட்சத்தை கையாடல் செய்த தனியார் இருசக்கர ஷோரூம் காசாளர் கைது..!

மேலும், வங்கியில் செலுத்தாமல் பணம் செலுத்தியது போல வங்கி செல்லானை தயார் செய்து கொடுத்தது கணக்கு தணிக்கை செய்த போது தெரிய வந்துள்ளது.


கோவை: கோவை பொள்ளாச்சியில் ரூ.3 லட்சத்தை கையாடல் செய்த தனியார் இருசக்கர ஷோரூம் காசாளரை போலீசார் கைது செய்தனர்.

கோவை பொள்ளாச்சியில் ஒரு தனியார் இருசக்கர ஷோரூம் உள்ளது. இங்கு சேரன் நகர் பகுதியை சேர்ந்த இந்திரன் (30) என்பவர் காசாளராக வேலை பார்த்து வருகிறார்.

இந்நிலையில், ஷோரூமில் கணக்கு தணிக்கை செய்த போது ரூ.3 லட்சத்தை இந்திரன் கையாடல் செய்து இருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து மகாலிங்கபுரம் போலீஸ் நிலையத்தில் உரிமையாளர் பிரபு புகார் கொடுத்தார். இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர்.

மேலும், போலீஸ் துணை சூப்பிரண்டு தமிழ்மணி மேற்பார்வையில் ஆய்வாளர் ராம்தாஸ் தலைமையில் துணை -ஆய்வாளர் கவுதம் மற்றும் போலீசார் இந்திரனை தேடி வந்தனர்.

இதற்கிடையில், போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் சேரன் நகரில் வைத்து இந்திரனை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினார்கள்.

விசாரணையில் ஷோரூமில் வரவு, செலவு கணக்கு விவரங்களை இந்திரன் கவனித்து வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் வங்கியில் செலுத்த வேண்டிய ரூ.3 லட்சத்தை வங்கியில் செலுத்தாமல் பணம் செலுத்தியது போல வங்கி செல்லானை தயார் செய்து கொடுத்து உள்ளார்.

பின்னர், கணக்கு தணிக்கை செய்த போது வங்கியில் ரூ.3 லட்சம் செலுத்தாமல் கையாடல் செய்தது தெரியவந்ததையடுத்து போலீசார் இந்திரனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Newsletter

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி கோவை காவல் ஆணையரிடம் தவெக மகளிர் அணி புகார்

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து பேசியதாகக் கூறி, உதயநிதி மீது சட்டரீதியான நடவ...

கேஎம்சிஹெச்சில் உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர் திறப்பு விழா

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் ஆகஸ்ட் 2ம் தேதி 'லைஃப் ஆப்டர் லைஃப் 2026' விழாவும், உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர்...

சித்தாபுதூர் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளி ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை சித்தாபுதூரில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் ஜூலை 31ஆம் தேதி சிற...

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...