மேலும், வங்கியில் செலுத்தாமல் பணம் செலுத்தியது போல வங்கி செல்லானை தயார் செய்து கொடுத்தது கணக்கு தணிக்கை செய்த போது தெரிய வந்துள்ளது.
கோவை: கோவை பொள்ளாச்சியில் ரூ.3 லட்சத்தை கையாடல் செய்த தனியார் இருசக்கர ஷோரூம் காசாளரை போலீசார் கைது செய்தனர்.
கோவை பொள்ளாச்சியில் ஒரு தனியார் இருசக்கர ஷோரூம் உள்ளது. இங்கு சேரன் நகர் பகுதியை சேர்ந்த இந்திரன் (30) என்பவர் காசாளராக வேலை பார்த்து வருகிறார்.
இந்நிலையில், ஷோரூமில் கணக்கு தணிக்கை செய்த போது ரூ.3 லட்சத்தை இந்திரன் கையாடல் செய்து இருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து மகாலிங்கபுரம் போலீஸ் நிலையத்தில் உரிமையாளர் பிரபு புகார் கொடுத்தார். இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர்.
மேலும், போலீஸ் துணை சூப்பிரண்டு தமிழ்மணி மேற்பார்வையில் ஆய்வாளர் ராம்தாஸ் தலைமையில் துணை -ஆய்வாளர் கவுதம் மற்றும் போலீசார் இந்திரனை தேடி வந்தனர்.
இதற்கிடையில், போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் சேரன் நகரில் வைத்து இந்திரனை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினார்கள்.
விசாரணையில் ஷோரூமில் வரவு, செலவு கணக்கு விவரங்களை இந்திரன் கவனித்து வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் வங்கியில் செலுத்த வேண்டிய ரூ.3 லட்சத்தை வங்கியில் செலுத்தாமல் பணம் செலுத்தியது போல வங்கி செல்லானை தயார் செய்து கொடுத்து உள்ளார்.
பின்னர், கணக்கு தணிக்கை செய்த போது வங்கியில் ரூ.3 லட்சம் செலுத்தாமல் கையாடல் செய்தது தெரியவந்ததையடுத்து போலீசார் இந்திரனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கோவை பொள்ளாச்சியில் ஒரு தனியார் இருசக்கர ஷோரூம் உள்ளது. இங்கு சேரன் நகர் பகுதியை சேர்ந்த இந்திரன் (30) என்பவர் காசாளராக வேலை பார்த்து வருகிறார்.
இந்நிலையில், ஷோரூமில் கணக்கு தணிக்கை செய்த போது ரூ.3 லட்சத்தை இந்திரன் கையாடல் செய்து இருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து மகாலிங்கபுரம் போலீஸ் நிலையத்தில் உரிமையாளர் பிரபு புகார் கொடுத்தார். இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர்.
மேலும், போலீஸ் துணை சூப்பிரண்டு தமிழ்மணி மேற்பார்வையில் ஆய்வாளர் ராம்தாஸ் தலைமையில் துணை -ஆய்வாளர் கவுதம் மற்றும் போலீசார் இந்திரனை தேடி வந்தனர்.
இதற்கிடையில், போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் சேரன் நகரில் வைத்து இந்திரனை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினார்கள்.
விசாரணையில் ஷோரூமில் வரவு, செலவு கணக்கு விவரங்களை இந்திரன் கவனித்து வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் வங்கியில் செலுத்த வேண்டிய ரூ.3 லட்சத்தை வங்கியில் செலுத்தாமல் பணம் செலுத்தியது போல வங்கி செல்லானை தயார் செய்து கொடுத்து உள்ளார்.
பின்னர், கணக்கு தணிக்கை செய்த போது வங்கியில் ரூ.3 லட்சம் செலுத்தாமல் கையாடல் செய்தது தெரியவந்ததையடுத்து போலீசார் இந்திரனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.