கோவை மாவட்டம் தோலம்பாளையம் அருகே காட்டு யானை தாக்கி இருளர் இனத்தை சேர்ந்த ஒருவர் பலி.

கோவை மாவட்டம் தோலம்பாளையம் அருகே காட்டு யானை தாக்கி இருளர் இனத்தை சேர்ந்த நஞ்சன் என்பவர் பலியான சம்பவம் அப்பகுதி மக்களிடையே  சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


கோவை:: கோவை மாவட்டம் தோலம்பாளையம் அருகே காட்டு யானை தாக்கி இருளர் இனத்தை சேர்ந்த நஞ்சன் என்பவர் பலியான சம்பவம் அப்பகுதி மக்களிடையேசோகத்தை ஏற்படுத்தியது.



கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்துள்ள தோலம்பாளையம் அருகே மொட்டியூர், சீங்குழி உள்ளிட்ட சுமார் 10 க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்கள் உள்ளன. இப்பகுதிகளில், இருளர் இனத்தை சேர்ந்த சுமார் 50 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதி அடர்ந்த வனப்பகுதியை ஒட்டி இருப்பதால் யானை, காட்டெருமை, சிறுத்தை, மான் உள்ளிட்ட வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி வனப்பகுதியை விட்டு அவ்வப்போது வெளியே வருவது வழக்கம். 

இந்நிலையில், சீங்குழி பகுதியை சேர்ந்த நஞ்சன் (வயது 50) மற்றும் அவரது அக்கா மகன் நஞ்சப்பன் (வயது 28) ஆகிய இருவர் நேற்று மாலை 7 மணியளவில் மொட்டியூர் அருகே உள்ள வனப்பகுதியை ஒட்டி இயற்கை உபாதை கழிக்கச் சென்றுள்ளனர்.

 

அப்போது,அப்பகுதியில் மறைந்திருந்த ஒற்றை காட்டு யானைநஞ்சனை திடீரென்று தாக்கியுள்ளது. இதில், நஞ்சனுக்கு முகம் மற்றும் மார்பு பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். மற்றொருவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

இச்சம்பவம் குறித்து தகவலறிந்த காரமடை போலீசார் விரைந்து சென்று சடலத்தை மீட்டு, மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சம்பவம் குறித்து அறிந்த வனத்துறையினர் விரைந்து வந்து சம்பவ இடத்தில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இயற்கை உபாதை கழிக்கச் சென்ற நபரை காட்டு யானை தாக்கி பரிதாபமாக பலியான சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

வால்பாறை அணையில் மூழ்கி 21 வயது இளைஞர் உயிரிழப்பு: தேடுதல் பணி தீவிரம்

கோவை மாவட்டம் வால்பாறை அருகே அம்பலபார அணையில் நேற்று 21 வயது இளைஞர் தனுஷ் மூழ்கி காணாமல் போனார். திருமண நிகழ்ச்சிக்கு வந...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம், குப்பை...

திருப்பூரில் கோயில் உண்டியல் உடைத்து பணம் திருட்டு; சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் தேடல்

திருப்பூர் கருவம்பாளையம் அருகே எருக்கலாங்காடு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் கோயிலில் உண்டியல் உடைத்து பணம் தி...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி...