கடந்த 8 மாத காலத்தில் திமுக அரசால் செயல்படுத்தப்பட்ட சிறப்பு திட்டங்களை பொதுமக்களுக்கு எடுத்துக் கூறி, நகர்புற உள்ளாட்சி தேர்தலில் வாக்குகளை கேட்க வேண்டும்.
கோவை: கடந்த 8 மாத காலத்தில் திமுக அரசால்செயல்படுத்தப்பட்ட சிறப்பு திட்டங்களை, பொதுமக்களுக்கு எடுத்துக் கூறி, நகர்புற உள்ளாட்சி தேர்தலில் வாக்குகளை கேட்க வேண்டும், என கோவை குனியமுத்தூர் பகுதியில்நடைபெற்ற திமுக வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்தில்மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பேசினார்.
வரும் பிப்ரவரி 19 ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ள நகர்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும்,திமுக மற்றும் கூட்டணி வேட்பாளர்களை அறிமுகம்செய்யும் நிகழ்ச்சி, கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருகிறது. நிகழ்ச்சியில், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயர்தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கலந்து கொண்டு வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்து வருகிறார்.
அதன்படி, இன்று தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வார்டுகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிமுக கூட்டம், குனியமுத்தூர் பகுதியில் உள்ள முத்துசாமி கல்யாண மண்டபத்தில் நடைபெற்றது.
கோவை வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் சி ஆர் ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற வேட்பாளர் அறிமுக நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி , திமுக ஆட்சி அமைத்த பிறகு கொண்டுவந்துள்ள பல கோடி மதிப்பிலான திட்டங்களை குறித்து பேசினார்.
உள்கட்சி தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள், தமிழக முதல்வராக ஸ்டாலின் பதவியேற்ற பின்பு செயல்படுத்தப்பட்ட சிறப்பு திட்டங்களை மக்களிடம் எடுத்துரைத்து வாக்குகளை சேகரிக்க வேண்டும் எனவும், அனைவரும் ஒற்றுமையுடன் இணைந்து பணியாற்றி உள்ளாட்சி தேர்தலில் மாபெரும் வெற்றி பெற பணியாற்றுமாறு, கேட்டுக் கொண்டார்.