கோவை நகர்புற உள்ளாட்சி தேர்தல்: ஒற்றுமையுடன், இணைந்து பணியாற்றி மாபெரும் வெற்றி பெற செய்ய வேண்டும் - அமைச்சர் செந்தில் பாலாஜி வேண்டுகோள்...!

கடந்த 8 மாத காலத்தில் திமுக அரசால்  செயல்படுத்தப்பட்ட சிறப்பு திட்டங்களை பொதுமக்களுக்கு எடுத்துக் கூறி, நகர்புற உள்ளாட்சி தேர்தலில் வாக்குகளை கேட்க வேண்டும்.



கோவை: கடந்த 8 மாத காலத்தில் திமுக அரசால்செயல்படுத்தப்பட்ட சிறப்பு திட்டங்களை, பொதுமக்களுக்கு எடுத்துக் கூறி, நகர்புற உள்ளாட்சி தேர்தலில் வாக்குகளை கேட்க வேண்டும், என கோவை குனியமுத்தூர் பகுதியில்நடைபெற்ற திமுக வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்தில்மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பேசினார். 



வரும் பிப்ரவரி 19 ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ள நகர்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும்,திமுக மற்றும் கூட்டணி வேட்பாளர்களை அறிமுகம்செய்யும் நிகழ்ச்சி, கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருகிறது. நிகழ்ச்சியில், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயர்தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கலந்து கொண்டு வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்து வருகிறார்.

அதன்படி, இன்று தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வார்டுகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிமுக கூட்டம், குனியமுத்தூர் பகுதியில் உள்ள முத்துசாமி கல்யாண மண்டபத்தில் நடைபெற்றது.



கோவை வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் சி ஆர் ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற வேட்பாளர் அறிமுக நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி , திமுக ஆட்சி அமைத்த பிறகு கொண்டுவந்துள்ள பல கோடி மதிப்பிலான திட்டங்களை குறித்து பேசினார். 

உள்கட்சி தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள், தமிழக முதல்வராக ஸ்டாலின் பதவியேற்ற பின்பு செயல்படுத்தப்பட்ட சிறப்பு திட்டங்களை மக்களிடம் எடுத்துரைத்து வாக்குகளை சேகரிக்க வேண்டும் எனவும், அனைவரும் ஒற்றுமையுடன் இணைந்து பணியாற்றி உள்ளாட்சி தேர்தலில் மாபெரும் வெற்றி பெற பணியாற்றுமாறு, கேட்டுக் கொண்டார்.



Newsletter

‘பியூஸ் கட்டை திருட்டு’, ‘சதி’ என ரீல்களை நிறுத்திவிட்டு, ரியல் நிர்வாகத்தில் கவனம் செலுத்த வேண்டும்: செந்தில் பாலாஜி

தமிழகத்தில் தொடரும் மின்வெட்டு மற்றும் மக்கள் போராட்டங்கள் தொடர்பாக, பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்குப் பதிலாக திசைதிருப்...

கிணத்துக்கடவில் 10,000 மரக்கன்றுகள் நடவு தொடக்கம்

கிணத்துக்கடவு கொண்டம்பட்டி ஊராட்சியில் சமூக பங்களிப்பு நிதியின் கீழ் 10,000 மரக்கன்றுகள் நடும் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர...

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பிய வழக்கில் 3 காவலர்கள் பணியிடை நீக்கம்

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து தப்பிய மோசடி வழக்கு கைதிக்கு உதவியதாக இரண்டாம் நிலை காவலர் மற்றும் கார் ஓட்டுநர் கைது...

காடுவெட்டிபாளையம் பகுதியில் நாளை மின்தடை

பாப்பம்பட்டி, என்.ஜி.பாளையம், எஸ்.ஆர்.பாளையம், அன்னூர் பகுதி மற்றும் சுண்டமேடு பகுதியில் ஜூன் 15 காலை 9 மணி முதல் மாலை 4...

பட்டணம் பகுதியில் நாளை மின்தடை அறிவிப்பு

பட்டணம், பட்டணம் புதூர், கம்பன் நகர், நொய்யல் நகர், சத்யநாராயணபுரம், காரவளி சாலை, நாகமநாயக்கன்பாளையம், காவேரி நகர் மற்று...

பயனற்ற நடைபாதை மேம்பாலம்: அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் மக்கள் முற்றுகை

அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் செல்லக்கூடிய மேம்பாலம் அமைக்கக் கோரிய நிலையில், நடைபாதை மேம்பாலப் பணிகள...