தூய்மைப் பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணம் வழங்கவில்லை எனில் உரிமம் ரத்து செய்யப்படும் - கோவை மாநகராட்சி எச்சரிக்கை..!

அதேபோல, இ.எஸ்.ஐ., மற்றும் வருங்கால வைப்பு நிதி தொகைக்கான யு.ஏ.என்., கடவுச்சொல் மூலம், தனிநபர் பிடித்தம் தொடர்பான எஸ்.எம்.எஸ்., பெற வழிவகை செய்ய வேண்டும் என்று உத்தரவு.


கோவை: கோவையில் தூய்மை பணியாளர்களுக்கான உபகரணங்கள் வழங்க தவறும் பட்சத்தில், ஒப்பந்தம் ரத்து செய்யப்படும் என தூய்மைப் பணி ஒப்பந்ததாரர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மாநகராட்சி நகர் நல அலுவலர் சதீஷ்குமார் அனைத்து தூய்மை பணி ஒப்பந்ததாரர்களுக்கும் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது:

கோவை மாநகராட்சி அனைத்து மண்டலங்கள் மற்றும் மைய அலுவலகத்தில், ஒப்பந்த அடிப்படையில் வார்டுகளில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு தேவைப்படும் 'கிளவுஸ்', 'கட் ஷூ', ஒளிரும் ஆடைகள் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள், கிருமிநாசினி, முகக்கவசம் வழங்க வேண்டும். இவற்றை வழங்குவதில் சுணக்கம் ஏற்பட்டால், சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும், தவறும் பட்சத்தில் ஒப்பந்தம் ரத்து செய்யப்படும். மாத ஊதியத்தில் பிடித்தம் செய்யப்படும். அதேபோல, இ.எஸ்.ஐ., மற்றும் வருங்கால வைப்பு நிதி தொகைக்கான யு.ஏ.என்., எண் கோடு, கடவுச்சொல் மூலம், தனிநபர் பிடித்தம் தொடர்பான எஸ்.எம்.எஸ்., பெற வழிவகை செய்ய, தூய்மை பணியாளர்களின் ஆதார் எண், வங்கிக் கணக்கு எண், மொபைல்போன் எண் விபரங்களை, அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.

Newsletter

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி கோவை காவல் ஆணையரிடம் தவெக மகளிர் அணி புகார்

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து பேசியதாகக் கூறி, உதயநிதி மீது சட்டரீதியான நடவ...

கேஎம்சிஹெச்சில் உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர் திறப்பு விழா

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் ஆகஸ்ட் 2ம் தேதி 'லைஃப் ஆப்டர் லைஃப் 2026' விழாவும், உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர்...

சித்தாபுதூர் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளி ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை சித்தாபுதூரில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் ஜூலை 31ஆம் தேதி சிற...

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...