ராஜ வீதியில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியில் பழமையான மரம் விழும் நிலையில் உள்ளது. கீழே 8 மின் இணைப்பு லைன்கள் செல்வதால் மரம் விழுந்தால் மின் இணைப்புகள் சேதமடைந்து ரோட்டில் விழும் அபாயம் உள்ளது.
கோவை: ராஜ வீதியில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியில் பழமையான மரம் விழும் நிலையில் உள்ளது. கீழே 8 மின் இணைப்பு லைன்கள் செல்வதால் மரம் விழுந்தால் மின் இணைப்புகள் சேதமடைந்து ரோட்டில் விழும் அபாயம் உள்ளது.
இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:-

கோவை ராஜவீதி மாநகராட்சி பார்க்கிங், நகர் நல மையம் மற்றும் பிறப்பு இறப்பு சான்றிதழ் வழங்கும் அலுவலகங்கள் அமைந்துள்ள பகுதி அருகே பழமையான மரம் ஒன்று வேர் பட்டுப்போய் விழும் நிலையில் உள்ளது.

பல நாட்களாக இந்த மரம் அப்புறப்படுத்தாமல் உள்ளது. கீழே 8 மின் இணைப்புகள் செல்கின்றன. தினமும் போக்குவரத்து நெரிசல் மிகுந்து காணப்படும் இப்பகுதியில் பல நாட்களாக அபாய நிலையிலுள்ள இந்த மரத்தைப் பாதுகாப்பான முறையில் அகற்ற மாநகராட்சி நிர்வாகம் மற்றும் மின் வாரியம் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பெரிய விபத்து ஏதேனும் ஏற்பட்டு மக்கள் பாதிக்கப்படும் முன் மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு மக்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:-
கோவை ராஜவீதி மாநகராட்சி பார்க்கிங், நகர் நல மையம் மற்றும் பிறப்பு இறப்பு சான்றிதழ் வழங்கும் அலுவலகங்கள் அமைந்துள்ள பகுதி அருகே பழமையான மரம் ஒன்று வேர் பட்டுப்போய் விழும் நிலையில் உள்ளது.
பல நாட்களாக இந்த மரம் அப்புறப்படுத்தாமல் உள்ளது. கீழே 8 மின் இணைப்புகள் செல்கின்றன. தினமும் போக்குவரத்து நெரிசல் மிகுந்து காணப்படும் இப்பகுதியில் பல நாட்களாக அபாய நிலையிலுள்ள இந்த மரத்தைப் பாதுகாப்பான முறையில் அகற்ற மாநகராட்சி நிர்வாகம் மற்றும் மின் வாரியம் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பெரிய விபத்து ஏதேனும் ஏற்பட்டு மக்கள் பாதிக்கப்படும் முன் மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு மக்கள் தெரிவித்தனர்.