கோவை உள்ளாட்சி தேர்தல் 2022: அதிமுகவின் மேயர் வேட்பாளர் என்று சொல்லப்படும் சர்மிளா சந்திரசேகர் 38 வது வார்டில் போட்டியிட வேட்பு மனு.

அதிமுக முன்னாள் அமைச்சரின் நெருங்கிய நண்பரான சந்திரசேகரின் மனைவி சர்மிளா, 38 வது வார்டில் அதிமுக சார்பில் போட்டியிட இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.


கோவை: நகர்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் கடந்த ஜனவரி 28 ஆம் தேதி துவங்கிய நிலையில், இன்று கோவை மாநகராட்சி மேற்கு மண்டல அலுவலகங்களில் விறுவிறுப்பாக வேட்புமனு தாக்கல் செய்து வருகின்றனர்.காலை முதலே, கோவையின் அனைத்து மண்டலங்களில் உள்ள அலுவலகங்களில் அதிமுக மற்றும் திமுக வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்து வருகின்றனர்.

பிப்ரவரி 4 ஆம் தேதி நகர்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் முடியவுள்ள நிலையில், கோவை வேட்பு மனு தாக்கல் சூடுபிடிக்க துவங்கியுள்ளது. நகர்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் கடந்த ஜனவரி 28 ஆம் தேதி துவங்கிய நிலையில், முதல் இரண்டு நாட்கள் மாநகராட்சி மண்டல அலுவலகங்களில் முக்கிய அரசியல் கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்கள் யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், நாளை, பிப்ரவரி 4 ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்யஇறுதி நாள் என்பதால், அரசியல் கட்சி வேட்பாளர்கள், சுயேட்சை வேட்பாளர்கள்வேட்பு மனு தாக்கல் செய்யும் அலுவலகங்களை நோக்கி படையெடுத்து வருகின்றனர்.

அதன்படி,, அதிமுக முன்னாள் அமைச்சரின் நெருங்கிய நண்பரான சந்திரசேகரின் மனைவி சர்மிளா, 38 வது வார்டில் அதிமுக சார்பில் போட்டியிட இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.



ஊடகவியல் துறையில் முனைவர் பட்டம் சர்மிளா, அதிமுக சார்பாக மேயர் பதவிக்கு போட்டியிடுவார் என்று

அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Newsletter

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

வால்பாறை அணையில் மூழ்கி 21 வயது இளைஞர் உயிரிழப்பு: தேடுதல் பணி தீவிரம்

கோவை மாவட்டம் வால்பாறை அருகே அம்பலபார அணையில் நேற்று 21 வயது இளைஞர் தனுஷ் மூழ்கி காணாமல் போனார். திருமண நிகழ்ச்சிக்கு வந...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம், குப்பை...

திருப்பூரில் கோயில் உண்டியல் உடைத்து பணம் திருட்டு; சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் தேடல்

திருப்பூர் கருவம்பாளையம் அருகே எருக்கலாங்காடு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் கோயிலில் உண்டியல் உடைத்து பணம் தி...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி...