கோவை உள்ளாட்சி தேர்தல் 2022: அதிமுகவின் மேயர் வேட்பாளர் என்று சொல்லப்படும் சர்மிளா சந்திரசேகர் 38 வது வார்டில் போட்டியிட வேட்பு மனு.

அதிமுக முன்னாள் அமைச்சரின் நெருங்கிய நண்பரான சந்திரசேகரின் மனைவி சர்மிளா, 38 வது வார்டில் அதிமுக சார்பில் போட்டியிட இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.


கோவை: நகர்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் கடந்த ஜனவரி 28 ஆம் தேதி துவங்கிய நிலையில், இன்று கோவை மாநகராட்சி மேற்கு மண்டல அலுவலகங்களில் விறுவிறுப்பாக வேட்புமனு தாக்கல் செய்து வருகின்றனர்.காலை முதலே, கோவையின் அனைத்து மண்டலங்களில் உள்ள அலுவலகங்களில் அதிமுக மற்றும் திமுக வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்து வருகின்றனர்.

பிப்ரவரி 4 ஆம் தேதி நகர்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் முடியவுள்ள நிலையில், கோவை வேட்பு மனு தாக்கல் சூடுபிடிக்க துவங்கியுள்ளது. நகர்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் கடந்த ஜனவரி 28 ஆம் தேதி துவங்கிய நிலையில், முதல் இரண்டு நாட்கள் மாநகராட்சி மண்டல அலுவலகங்களில் முக்கிய அரசியல் கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்கள் யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், நாளை, பிப்ரவரி 4 ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்யஇறுதி நாள் என்பதால், அரசியல் கட்சி வேட்பாளர்கள், சுயேட்சை வேட்பாளர்கள்வேட்பு மனு தாக்கல் செய்யும் அலுவலகங்களை நோக்கி படையெடுத்து வருகின்றனர்.

அதன்படி,, அதிமுக முன்னாள் அமைச்சரின் நெருங்கிய நண்பரான சந்திரசேகரின் மனைவி சர்மிளா, 38 வது வார்டில் அதிமுக சார்பில் போட்டியிட இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.



ஊடகவியல் துறையில் முனைவர் பட்டம் சர்மிளா, அதிமுக சார்பாக மேயர் பதவிக்கு போட்டியிடுவார் என்று

அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Newsletter

பயனற்ற நடைபாதை மேம்பாலம்: அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் மக்கள் முற்றுகை

அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் செல்லக்கூடிய மேம்பாலம் அமைக்கக் கோரிய நிலையில், நடைபாதை மேம்பாலப் பணிகள...

கோவையில் IWMA கருத்தரங்கு: தொழிற்சாலை கழிவு மேலாண்மை குறித்து விழிப்புணர்வு

கோவையில் நடைபெற்ற தொழில்துறை கழிவு மேலாண்மை கருத்தரங்கில், தொழிற்சாலை கழிவுகள் சட்டவிரோதமாக அப்புறப்படுத்தப்படுவதைத் தடு...

கோவை-அவிநாசி சாலையில் புதிய போக்குவரத்து சிக்னல்கள்: இன்று சோதனை ஓட்டம் தொடக்கம்

கோவை-அவிநாசி சாலையில் ESSO Bank மற்றும் Pioneer Mill சந்திப்புகளில் அமைக்கப்பட்ட புதிய தானியங்கி போக்குவரத்து சிக்னல்கள்...

கோவையில் மக்கள் நீதிமன்றம்: ஒரே நாளில் 4782 வழக்குகளுக்கு தீர்வு, ரூ.1.11 கோடி இழப்பீடு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 4782 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. விபத்தில் உயிரிழந்த இரு கு...

கோவை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம் ஜூன் 17-இல் அறிவிப்பு

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் ஜூன் 17-ஆம் தேதி புதன்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹால் கூட்ட அரங்கில...

கோவையில் ஜூன் 15 அன்று முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி எடுக்க அனைத்து பள்ளிகளுக்கும் மாவட்ட ஆட்சியர் உத்தரவு

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனவர், ஜூன் 15 அன்று முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு மாவட்டத்தி...