கோவை அண்ணா சிலை அருகில் உள்ள அதிமுக அலுவலகத்தில், அறிஞர் அண்ணாவின் திருவுரு படத்திற்கு அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள், அம்மன் கே அர்ஜுனன், கே. ஆர். ஜெயராம் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
கோவை: தமிழகம் முழுவதும் இன்று பேரறிஞர் அண்ணாவின் 53 வது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது
தமிழகம் முழுவதும் திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் அண்ணாவின் புகை படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி வருகின்றனர். உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், பொது இடங்களில் நிகழ்ச்சி நடைபெற தடை விதித்துள்ளதால், கட்சிஅலுவலகங்களில் அண்ணாவின் திருவுரு படத்தை வைத்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
அந்த வகையில், கோவை அண்ணா சிலை அருகில் உள்ள அதிமுக அலுவலகத்தில், அறிஞர் அண்ணா திருவுரு படத்திற்கு அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள், அம்மன் கே அர்ஜுனன், கே. ஆர். ஜெயராம் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். இதில், அதிமுக தொண்டர்கள் உள்ளிட்ட பலர் அஞ்சலி செலுத்தினர்.

கோவை அவிநாசி சாலையில் உள்ள அண்ணா சிலை பகுதியில் உள்ள அவரின் உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துவது வழக்கமாக இருந்து வரும் நிலையில், தேர்தல் விதிமுறைகள் அமலில் உள்ளதால், இம்முறை அந்தந்த கட்சி அலுவலகங்களில் அவரது நினைவு தினம் எளிமையான முறையில் அனுசரிக்கப்பட்டு வருகிறது.

தமிழகம் முழுவதும் திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் அண்ணாவின் புகை படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி வருகின்றனர். உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், பொது இடங்களில் நிகழ்ச்சி நடைபெற தடை விதித்துள்ளதால், கட்சிஅலுவலகங்களில் அண்ணாவின் திருவுரு படத்தை வைத்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
அந்த வகையில், கோவை அண்ணா சிலை அருகில் உள்ள அதிமுக அலுவலகத்தில், அறிஞர் அண்ணா திருவுரு படத்திற்கு அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள், அம்மன் கே அர்ஜுனன், கே. ஆர். ஜெயராம் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். இதில், அதிமுக தொண்டர்கள் உள்ளிட்ட பலர் அஞ்சலி செலுத்தினர்.
கோவை அவிநாசி சாலையில் உள்ள அண்ணா சிலை பகுதியில் உள்ள அவரின் உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துவது வழக்கமாக இருந்து வரும் நிலையில், தேர்தல் விதிமுறைகள் அமலில் உள்ளதால், இம்முறை அந்தந்த கட்சி அலுவலகங்களில் அவரது நினைவு தினம் எளிமையான முறையில் அனுசரிக்கப்பட்டு வருகிறது.