திருப்பூரில் தேர்தல் வைப்பு தொகையை நாணயங்களாக செலுத்திய வேட்பாளர்

திருப்பூர் மாநகராட்சி 9-வது வார்டில், தமிழ்நாடு இளைஞர் கட்சி சார்பில் போட்டியிடும் ஜோதி மகேசுவரி தேர்தல் வைப்புத் தொகை 4000 ரூபாயை, 20 ரூபாய், 10-ரூபாய் நாணயங்களாகச் செலுத்தினார்.


திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சி 9-வது வார்டில், தமிழ்நாடு இளைஞர் கட்சி சார்பில் போட்டியிடும் ஜோதி மகேசுவரி தேர்தல் வைப்புத் தொகை 4000 ரூபாயை, 20 ரூபாய், 10-ரூபாய் நாணயங்களாகச் செலுத்தினார்.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்பு மனு நாளை மறுநாள் நிறைவடைய உள்ள நிலையில், வேட்புமனு தாக்கல் செய்ய வேட்பாளர்கள் மும்முரம் காட்டி வருகின்றனர். திருப்பூர் மாநகராட்சி 9 வது வார்டில் தமிழ்நாடு இளைஞர் கட்சி சார்பில் ஜோதி மகேசுவரி என்பவர் கவுன்சிலர் பதவிக்குப் போட்டியிடுகிறார்.

மாநகராட்சி கவுன்சிலர் பதவிக்குப் போட்டியிடத் தேர்தல் வைப்புத் தொகையாக 4000 ரூபாயைச் செலுத்த வேண்டும்.



இந்நிலையில் ஜோதி மகேசுவரி தனது வைப்புத் தொகையான 4000 ரூபாயை 20 ரூபாய், 10 ரூபாய் நாணயங்கள் ஆக மாநகராட்சி முதலாம் மண்டல அலுவலகத்தில் செலுத்தினார்.



இதனை தொடர்ந்து வேட்புமனுத் தாக்கல் செய்யச் சென்றார்.



மேலும், வேட்பாளர் கூறுகையில், பெரும்பாலான இடங்களில் பத்து ரூபாய் இருபது ரூபாய் நாணயங்களை ரிசர்வ் வங்கி அறிவித்தும் வாங்குவதில்லை. இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், நாணயங்களைத் திருப்பூர் மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் தெரிவித்தார். மேலும் இதுகுறித்து அரசும் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்தார்.

Newsletter

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி கோவை காவல் ஆணையரிடம் தவெக மகளிர் அணி புகார்

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து பேசியதாகக் கூறி, உதயநிதி மீது சட்டரீதியான நடவ...

கேஎம்சிஹெச்சில் உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர் திறப்பு விழா

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் ஆகஸ்ட் 2ம் தேதி 'லைஃப் ஆப்டர் லைஃப் 2026' விழாவும், உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர்...

சித்தாபுதூர் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளி ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை சித்தாபுதூரில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் ஜூலை 31ஆம் தேதி சிற...

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...