திருப்பூர் மாநகராட்சி 9-வது வார்டில், தமிழ்நாடு இளைஞர் கட்சி சார்பில் போட்டியிடும் ஜோதி மகேசுவரி தேர்தல் வைப்புத் தொகை 4000 ரூபாயை, 20 ரூபாய், 10-ரூபாய் நாணயங்களாகச் செலுத்தினார்.
திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சி 9-வது வார்டில், தமிழ்நாடு இளைஞர் கட்சி சார்பில் போட்டியிடும் ஜோதி மகேசுவரி தேர்தல் வைப்புத் தொகை 4000 ரூபாயை, 20 ரூபாய், 10-ரூபாய் நாணயங்களாகச் செலுத்தினார்.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்பு மனு நாளை மறுநாள் நிறைவடைய உள்ள நிலையில், வேட்புமனு தாக்கல் செய்ய வேட்பாளர்கள் மும்முரம் காட்டி வருகின்றனர். திருப்பூர் மாநகராட்சி 9 வது வார்டில் தமிழ்நாடு இளைஞர் கட்சி சார்பில் ஜோதி மகேசுவரி என்பவர் கவுன்சிலர் பதவிக்குப் போட்டியிடுகிறார்.
மாநகராட்சி கவுன்சிலர் பதவிக்குப் போட்டியிடத் தேர்தல் வைப்புத் தொகையாக 4000 ரூபாயைச் செலுத்த வேண்டும்.

இந்நிலையில் ஜோதி மகேசுவரி தனது வைப்புத் தொகையான 4000 ரூபாயை 20 ரூபாய், 10 ரூபாய் நாணயங்கள் ஆக மாநகராட்சி முதலாம் மண்டல அலுவலகத்தில் செலுத்தினார்.

இதனை தொடர்ந்து வேட்புமனுத் தாக்கல் செய்யச் சென்றார்.

மேலும், வேட்பாளர் கூறுகையில், பெரும்பாலான இடங்களில் பத்து ரூபாய் இருபது ரூபாய் நாணயங்களை ரிசர்வ் வங்கி அறிவித்தும் வாங்குவதில்லை. இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், நாணயங்களைத் திருப்பூர் மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் தெரிவித்தார். மேலும் இதுகுறித்து அரசும் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்தார்.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்பு மனு நாளை மறுநாள் நிறைவடைய உள்ள நிலையில், வேட்புமனு தாக்கல் செய்ய வேட்பாளர்கள் மும்முரம் காட்டி வருகின்றனர். திருப்பூர் மாநகராட்சி 9 வது வார்டில் தமிழ்நாடு இளைஞர் கட்சி சார்பில் ஜோதி மகேசுவரி என்பவர் கவுன்சிலர் பதவிக்குப் போட்டியிடுகிறார்.
மாநகராட்சி கவுன்சிலர் பதவிக்குப் போட்டியிடத் தேர்தல் வைப்புத் தொகையாக 4000 ரூபாயைச் செலுத்த வேண்டும்.
இந்நிலையில் ஜோதி மகேசுவரி தனது வைப்புத் தொகையான 4000 ரூபாயை 20 ரூபாய், 10 ரூபாய் நாணயங்கள் ஆக மாநகராட்சி முதலாம் மண்டல அலுவலகத்தில் செலுத்தினார்.
இதனை தொடர்ந்து வேட்புமனுத் தாக்கல் செய்யச் சென்றார்.
மேலும், வேட்பாளர் கூறுகையில், பெரும்பாலான இடங்களில் பத்து ரூபாய் இருபது ரூபாய் நாணயங்களை ரிசர்வ் வங்கி அறிவித்தும் வாங்குவதில்லை. இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், நாணயங்களைத் திருப்பூர் மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் தெரிவித்தார். மேலும் இதுகுறித்து அரசும் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்தார்.