கோவையில் மினிடோர் வாகனத்தின் மீது இருசக்கர வாகனம் மோதி விபத்து - இளைஞர் பரிதாபமாக உயிரிழப்பு..!

இளைஞரின் உடல் வாகனத்தில் சிக்கிய நிலையில், இழுத்துச் செல்லப்படும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.



கோவை: கோவையில் மினிடோர் வாகனத்தின் மீது இருசக்கர வாகனம் மோதி இளைஞர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 29ம் தேதியன்று கோவை - பொள்ளாச்சி சாலையில் உள்ள சிட்கோ தொழிற்பேட்டையின் முன்புள்ள பாலத்தில் இருந்து கீழே இறங்கிய இருசக்கர வாகனம், சிட்கோவில் இருந்து வெளியே வந்த மினிடோர் சரக்கு வாகனத்தின் மீது மோதியதில் இரு சக்கர வாகனத்தை ஓட்டி வந்த இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதுகுறித்து போத்தனூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில் உயிரிழந்த இளைஞர் வடவள்ளி பகுதியை சேர்ந்த நிஷாந்த்ராஜ்(22) என்பதும் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் நிலையில், இரவு நேரப் பணி முடிந்து வீடு திரும்பும் பொழுது இந்த விபத்து ஏற்பட்டது தெரியவந்தது.

இந்நிலையில், விபத்து ஏற்பட்ட சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. இதில் மினிடோர் வாகனத்தில் மோதி விபத்து ஏற்பட்டு உயிரிழந்த நிலையில், மினிடோர் வாகனம் இழுத்துச் செல்லும் காட்சிகள் பதிவாகியுள்ளது.

இந்த சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. மேலும் இருசக்கர வாகனம் மோதியது தெரிந்தும் நிறுத்தாமல் சென்ற மினிடோர் வாகன ஓட்டிநரை காவல்துறை தேடி வருகின்றனர்.

Newsletter

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

வால்பாறை அணையில் மூழ்கி 21 வயது இளைஞர் உயிரிழப்பு: தேடுதல் பணி தீவிரம்

கோவை மாவட்டம் வால்பாறை அருகே அம்பலபார அணையில் நேற்று 21 வயது இளைஞர் தனுஷ் மூழ்கி காணாமல் போனார். திருமண நிகழ்ச்சிக்கு வந...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம், குப்பை...

திருப்பூரில் கோயில் உண்டியல் உடைத்து பணம் திருட்டு; சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் தேடல்

திருப்பூர் கருவம்பாளையம் அருகே எருக்கலாங்காடு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் கோயிலில் உண்டியல் உடைத்து பணம் தி...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி...