பொள்ளாச்சியில் கார் மோதி காளை மாடு பலி

பொள்ளாச்சி அருகே காளை மாட்டு வண்டி மீது கார் மோதி ஏற்பட்ட விபத்தில், காளைமாடு ஒன்று உயிரிழந்து இருவர் படுகாயம் அடைந்தனர்.


கோவை: பொள்ளாச்சி அருகே காளை மாட்டு வண்டி மீது கார் மோதி ஏற்பட்ட விபத்தில், காளைமாடு ஒன்று உயிரிழந்து இருவர் படுகாயம் அடைந்தனர்.

கேரள மாநிலம் சித்தூர் பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ்(38), அவரது அண்ணன் பிரகாஷ்(40) இருவரும், நேற்று தை அமாவாசையை முன்னிட்டு காளை மாட்டு வண்டியில் திருமூர்த்திமலைக்கு தரிசனத்திற்குச் சென்றுள்ளனர்.

தரிசனம் முடித்து விட்டு மாலை மீன்கரை சாலை வழியாக மீனாட்சிபுரம் அருகே சென்று கொண்டிருந்தபோது, பின்னால், வந்த கார் ஒன்று மாட்டு வண்டி மீது மோதியது. இதில், மாட்டு வண்டியிலிருந்த இருவரும் தூக்கி வீசப்பட்டனர்.

இதில் இருவருக்கும் காயங்கள் ஏற்பட்டது. மேலும், விபத்தில் காளை மாடு ஒன்று உயிரிழந்தது. இதையடுத்து, இவர்கள் ஆனைமலை காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில், வழக்குப்பதிவு செய்த போலீசார், காரை இயக்கி வந்த பெரியபோது பகுதியைச் சேர்ந்த மணிக்குமாரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Newsletter

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி கோவை காவல் ஆணையரிடம் தவெக மகளிர் அணி புகார்

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து பேசியதாகக் கூறி, உதயநிதி மீது சட்டரீதியான நடவ...

கேஎம்சிஹெச்சில் உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர் திறப்பு விழா

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் ஆகஸ்ட் 2ம் தேதி 'லைஃப் ஆப்டர் லைஃப் 2026' விழாவும், உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர்...

சித்தாபுதூர் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளி ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை சித்தாபுதூரில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் ஜூலை 31ஆம் தேதி சிற...

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...