மத்திய பட்ஜெட்: சிறு-குறு தொழில்களுக்கு எந்த விதத்திலும்‌ ஏற்றம்‌ இல்லை- கொசிமா

குறு மற்றும்‌ சிறு தொழில்களுக்கு வழங்கப்படும்‌, கடன்களுக்கு 5-சதவிகித வட்டி வேண்டும்‌ என்ற, கோரிக்கையைக் கருத்தில்‌ கொள்ளவில்லை. ஆக மொத்தம்‌ இந்த நிதிநிலை அறிக்கை சிறு குறு தொழில்களுக்கு எந்த விதத்திலும்‌ ஏற்றம்‌ இல்லை என கொசிமா தெரிவித்துள்ளது.


கோவை: மத்திய பட்ஜெட்டில், சிறு குறு தொழில்களுக்கு எந்த விதத்திலும்‌ ஏற்றம்‌ இல்லை என கொசிமா தெரிவித்துள்ளது.

இதுகுறித்து கோவை சிட்கோ தொழிற்பேட்டை உற்பத்தியாளர்கள் நலச்சங்கம் கூறியுள்ளதாவது:-

இன்று மத்திய நிதியமைச்சர்‌ தாக்கல்‌ செய்த நிதிநிலை அறிக்கையில்,‌ சிறு குறு தொழில்களுக்கு வழங்கும்‌ அவசரகாலகடன்‌ திட்டத்தை 2023-வரை நீட்டிப்பு செய்ததை வரவேற்கிறோம்‌.

அதேபோல்‌, மூன்று ஆண்டுகளில்‌ ரயில்வேயில்‌ 400-புதிய ரயில்கள்‌ வந்தே பாரத்‌ திட்டத்தின்‌ கீழ்‌ இயக்கப்படுவதையும்‌, சோலார்‌ மின்‌ உற்பத்திக்கு 19500/- கோடி நிதி உதவி அளித்ததையும்‌, ராணுவத் தளவாட உற்பத்தியில்‌ 68-சதவிகிதம்‌ உள்நாட்டில்‌ உற்பத்தி செய்ய ஊக்கம்‌ அளிப்பதையும்‌, நாங்கள்‌ வரவேற்கிறோம்‌.

அதேபோல்‌, நாங்கள்‌ எதிர்பார்த்த தனிநபர்‌ வருமான வரி விதிப்பு வரம்பு உயர்த்தப்படும்‌ என்று எதிர்‌ பார்த்தோம்‌ ஏமாற்றமளிக்கிறது. அதேபோல்‌ GST JOB WORK 5% ஆக குறைக்க வேண்டும்‌ என்ற எங்கள்‌ கோரிக்கை ஏமாற்றமளிக்கிறது.

மேலும்‌, சிறு குறு தொழில்களுக்கு மூலதன கடன்‌ மானியம்‌ அதிகரிக்க வேண்டும்‌, என்று எதிர்பார்த்தோம்‌. அதுவும்‌ ஏமாற்றமளிக்கிறது.

குறு மற்றும்‌ சிறு தொழில்களுக்கு வழங்கப்படும்‌, கடன்களுக்கு 5-சதவிகித வட்டி வேண்டும்‌ என்ற, கோரிக்கையைக் கருத்தில்‌ கொள்ளவில்லை. ஆக மொத்தம்‌ இந்த நிதிநிலை அறிக்கை சிறு குறு தொழில்களுக்கு எந்த விதத்திலும்‌ ஏற்றம்‌ இல்லை என்பது எங்கள்‌ கருத்து.

இவ்வாறு கொசிமா தெரிவித்துள்ளது.

Newsletter

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி கோவை காவல் ஆணையரிடம் தவெக மகளிர் அணி புகார்

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து பேசியதாகக் கூறி, உதயநிதி மீது சட்டரீதியான நடவ...

கேஎம்சிஹெச்சில் உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர் திறப்பு விழா

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் ஆகஸ்ட் 2ம் தேதி 'லைஃப் ஆப்டர் லைஃப் 2026' விழாவும், உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர்...

சித்தாபுதூர் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளி ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை சித்தாபுதூரில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் ஜூலை 31ஆம் தேதி சிற...

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...