தேர்தல் விதிமீறல் குறித்து தொலைபேசியில் தெரிவிக்கலாம் - நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தகவல்

பணம் மற்றும் பரிசு பொருட்கள் பரிமாற்றம் குறித்து தகவல் தெரிந்தால் உடனடியாக நீலகிரி மாவட்ட காவல் துறையின் தேர்தல் கட்டுப்பாட்டு அலுவலகத்தை 978980-0100 என்ற தொலைபேசி எண்ணை அழைத்து தகவல் தெரிவிக்கலாம்.


நீலகிரி: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்தை விதிமுறை அமலில் உள்ள நிலையில், நீலகிரி மாவட்டத்தில் வாகன சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

தேர்தல் விதிமீறல்கள் குறித்து பொதுமக்கள் தகவல் தெரிவிக்க ஏதுவாக, தேர்தல் கட்டுப்பாட்டு அலுவலகத்தை தொடர்பு கொண்டு புகார் அளிக்க பிரத்யேக எண்ணை, நீலகிரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர், ஆஷிஷ் ராவத் அறிவித்துள்ளார்.

"லஞ்சம் கொடுப்பதும் வாங்குவதும் குற்றம். எனவே, பணம் பட்டுவாடா, பொருள்கள், உணவு மதுபான வகைகள் வழங்குதல் குறித்து தகவல் தெரிய வரும் பட்சத்தில், உடனடியாக பொதுமக்கள் நீலகிரி மாவட்ட காவல் துறையின் தேர்தல் கட்டுப்பாட்டு அலுவலகத்தை 978980-0100 என்ற தொலைபேசி எண்ணை அழைத்து தகவல் தெரிவிக்கலாம்", என்று நீலகிரி மாவட்ட எஸ்.பி. ஆஷிஷ் ராவத் தெரிவித்துள்ளார்.

தேர்தல் விதிமீறல்கள் குறித்து, பொதுமக்கள் குறுஞ்செய்தி அனுப்பலாம் என்றும் அவ்வாறு தெரிவிப்பவர்களின் விவரம் ரகசியமாகப் பாதுகாக்கப்படும், தக்க சன்மானம் வழங்கப்படும், என்று அவர் தெரிவித்துள்ளார்.

Newsletter

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி கோவை காவல் ஆணையரிடம் தவெக மகளிர் அணி புகார்

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து பேசியதாகக் கூறி, உதயநிதி மீது சட்டரீதியான நடவ...

கேஎம்சிஹெச்சில் உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர் திறப்பு விழா

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் ஆகஸ்ட் 2ம் தேதி 'லைஃப் ஆப்டர் லைஃப் 2026' விழாவும், உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர்...

சித்தாபுதூர் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளி ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை சித்தாபுதூரில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் ஜூலை 31ஆம் தேதி சிற...

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...