கோவையில் மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த சிறுவர்களை பணிக்கு அமர்த்தியவர் மீது வழக்குப் பதிவு..!

கோவை சலீவன் வீதி பகுதியில் உள்ள ஒரு நிறுவனத்தில் பணியாற்றிய குழந்தை தொழிலாளர்கள் மீட்கப்பட்டனர்.


கோவை: கோவையில் சிறுவர்களை பணிக்கு அமர்த்தியவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள தேசிய குழந்தை தொழிலாளர் ஒழிப்பு பிரிவு அதிகாரியாக பிஜு அலெக்ஸ் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு கோவை சலீவன் வீதி பகுதியில் உள்ள ஒரு நிறுவனத்தில் குழந்தை தொழிலாளர்கள் பணிக்கு அமர்த்தப்பட்டு இருப்பதாக தகவல் கிடைத்தது.

இதையடுத்து, அதிகாரிகளுடன் சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது அங்கு இரண்டு குழந்தை தொழிலாளர்கள் பணிபுரிந்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும், அவர்கள் மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்தது. ஆனால் அவர்களை பணியில் அமர்த்தி இருந்த நிறுவனத்தின் உரிமையாளர் அவர்கள் குழந்தை தொழிலாளர்கள் இல்லை என கூறினார்.

இதனையடுத்து, அந்த இரண்டு சிறுவர்களுக்கும் கோவை அரசு மருத்துவமனையில் சோதனை செய்யப்பட்டது. சோதனையில் அவர்கள் 16 முதல் 18 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் என்பது உறுதிசெய்யப்பட்டது.

பின்னர், இந்த சிறுவர்களை பணியில் அமர்த்திய சலீவன் வீதி பகுதியைச் சேர்ந்த அப்பாஸ் ஷேக் என்பவர் மீது வெரைட்டி ஹால் ரோடு போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில், போலீசார் குழந்தை தொழிலாளர்களை பணிக்கு அமர்த்தியவர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

வால்பாறை அணையில் மூழ்கி 21 வயது இளைஞர் உயிரிழப்பு: தேடுதல் பணி தீவிரம்

கோவை மாவட்டம் வால்பாறை அருகே அம்பலபார அணையில் நேற்று 21 வயது இளைஞர் தனுஷ் மூழ்கி காணாமல் போனார். திருமண நிகழ்ச்சிக்கு வந...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம், குப்பை...

திருப்பூரில் கோயில் உண்டியல் உடைத்து பணம் திருட்டு; சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் தேடல்

திருப்பூர் கருவம்பாளையம் அருகே எருக்கலாங்காடு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் கோயிலில் உண்டியல் உடைத்து பணம் தி...