கோவையில் மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த சிறுவர்களை பணிக்கு அமர்த்தியவர் மீது வழக்குப் பதிவு..!

கோவை சலீவன் வீதி பகுதியில் உள்ள ஒரு நிறுவனத்தில் பணியாற்றிய குழந்தை தொழிலாளர்கள் மீட்கப்பட்டனர்.


கோவை: கோவையில் சிறுவர்களை பணிக்கு அமர்த்தியவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள தேசிய குழந்தை தொழிலாளர் ஒழிப்பு பிரிவு அதிகாரியாக பிஜு அலெக்ஸ் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு கோவை சலீவன் வீதி பகுதியில் உள்ள ஒரு நிறுவனத்தில் குழந்தை தொழிலாளர்கள் பணிக்கு அமர்த்தப்பட்டு இருப்பதாக தகவல் கிடைத்தது.

இதையடுத்து, அதிகாரிகளுடன் சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது அங்கு இரண்டு குழந்தை தொழிலாளர்கள் பணிபுரிந்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும், அவர்கள் மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்தது. ஆனால் அவர்களை பணியில் அமர்த்தி இருந்த நிறுவனத்தின் உரிமையாளர் அவர்கள் குழந்தை தொழிலாளர்கள் இல்லை என கூறினார்.

இதனையடுத்து, அந்த இரண்டு சிறுவர்களுக்கும் கோவை அரசு மருத்துவமனையில் சோதனை செய்யப்பட்டது. சோதனையில் அவர்கள் 16 முதல் 18 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் என்பது உறுதிசெய்யப்பட்டது.

பின்னர், இந்த சிறுவர்களை பணியில் அமர்த்திய சலீவன் வீதி பகுதியைச் சேர்ந்த அப்பாஸ் ஷேக் என்பவர் மீது வெரைட்டி ஹால் ரோடு போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில், போலீசார் குழந்தை தொழிலாளர்களை பணிக்கு அமர்த்தியவர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி கோவை காவல் ஆணையரிடம் தவெக மகளிர் அணி புகார்

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து பேசியதாகக் கூறி, உதயநிதி மீது சட்டரீதியான நடவ...

கேஎம்சிஹெச்சில் உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர் திறப்பு விழா

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் ஆகஸ்ட் 2ம் தேதி 'லைஃப் ஆப்டர் லைஃப் 2026' விழாவும், உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர்...

சித்தாபுதூர் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளி ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை சித்தாபுதூரில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் ஜூலை 31ஆம் தேதி சிற...

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...