கோவை உள்ளாட்சி தேர்தல் 2022: கூட்டணி கட்சிகள் வார்டு ஒதுக்கீட்டை வெளியிட்டது திமுக...!

காங்கிரஸ் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கூட்டணி வார்டு ஒதுக்கீடு குறித்து தகவல் எதுவும் இல்லாத நிலையில், இறுதிக் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக திமுக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.


கோவை: கோவை மாநகராட்சியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட திமுக கூட்டணி வார்டு ஒதுக்கீடு இன்று வெளியிடப்பட்டது. வரும் 19 ஆம் தேதி உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், முக்கிய கட்சிகளான திமுக, அதிமுக மற்றும் பாஜக வேட்பாளர் பட்டியலை இன்னும் வெளியிடாதது கட்சியினர் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

நேற்று, பாஜக மற்றும் அதிமுகவின் உள்ளாட்சித் தேர்தல் கூட்டணி முறிந்ததையடுத்து, பாஜக தனித்துப் போட்டியிடும் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அறிவிப்பு வெளியிட்டார். இன்னும் வேட்பு மனு தாக்கல் செய்ய மூன்று நாட்களே உள்ள நிலையில், திமுக தன் கூட்டணிக் கட்சிகளுக்கு எவ்வளவு வார்டு ஒதுக்கீடு செய்யும் என்ற எதிர்பார்ப்பு கூடியுள்ளது.

கடந்த சட்டமன்ற தேர்தலில் கோவையை திமுக கோட்டைவிட்ட காரணத்தினால், கோவையில் அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில், யாருக்கு சீட் வழங்குவது? வெற்றிக்குக் கூட்டணி கட்சிகளின் பங்களிப்பு குறித்து தீவிர ஆய்வு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் முதற்கட்டமாக, கூட்டணி கட்சிகளுக்கான ஒதுக்கீடு குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அதன்படி, திமுக கூட்டணி கட்சிகளுக்கு இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து, கோவை மாநகராட்சியில் உள்ள மொத்தம் 100 வார்டுகளில், திமுக கூட்டணியில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு நான்கு வார்டுகள், மதிமுகவிற்கு முன்று வார்டுகள், கொங்குநாடு மக்கள் கட்சிக்கு இரண்டு வார்டுகள், மனிதநேய மக்கள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு ஒரு வார்டு என ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மேலும், காங்கிரஸ் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கூட்டணி மற்றும் இட ஒதுக்கீடு குறித்து தகவல் எதுவும் இல்லாத நிலையில், இறுதி கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக திமுக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இன்னும் சற்று நேரத்தில், காங்கிரஸ் கூட்டணிக்கான வார்டுகள் அறிவிக்கப்படும் என்றும், 7 முதல் 9 வார்டுகள் வரை காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்படும் என்று காங்கிரஸ் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Newsletter

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி கோவை காவல் ஆணையரிடம் தவெக மகளிர் அணி புகார்

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து பேசியதாகக் கூறி, உதயநிதி மீது சட்டரீதியான நடவ...

கேஎம்சிஹெச்சில் உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர் திறப்பு விழா

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் ஆகஸ்ட் 2ம் தேதி 'லைஃப் ஆப்டர் லைஃப் 2026' விழாவும், உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர்...

சித்தாபுதூர் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளி ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை சித்தாபுதூரில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் ஜூலை 31ஆம் தேதி சிற...

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...