தமிழக அரசின் சார்பில் ஆண்டு தோறும் மாநில அளவில் சிறப்பாக செயல்படும் காவல் நிலையங்கள் தேர்வு செய்யப்பட்டு வருகிறது. அதன்படி, 2021 ஆம் ஆண்டிற்கான சிறந்த காவல் நிலையங்களாக, கோவை பீளமேடு மற்றும் பொள்ளாச்சி மேற்கு காவல் நிலையம், தேர்வு.
கோவை: தமிழக அரசின் சார்பில் ஆண்டு தோறும் மாநில அளவில் சிறப்பாக செயல்படும் காவல்நிலையங்கள் தேர்வு செய்யப்பட்டு தமிழக முதல்வரால் கேடயமும, பாராட்டு சான்றிதழ்களும் வழங்கப்பட்டு வருகிறது.
அதன்படி, 2021 ஆம் ஆண்டிற்கான சிறந்த காவல் நிலையங்களாக, கோவை பீளமேடு மற்றும் பொள்ளாச்சி மேற்கு காவல் நிலையம், தமிழக அளவில் சிறந்த காவல் நிலையங்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளன.
காவல் நிலையங்களில் வழக்குகளை விரைந்து முடிப்பது, பதிவேடுகளை சரியாக பராமரிப்பது, காவல் நிலையத்தை சுத்தமாக வைத்து கொள்வது உள்ளிட்டவற்றில் சிறப்பாக செயல்படும் காவல் நிலையங்கள் ஆண்டுதோறும் ஆய்வு செய்யப்பட்டு விருது வழங்கப்பட்டு வருகிறது.
அதன்படி, 2021 ஆம் ஆண்டிற்கான சிறந்த காவல் நிலையமாக கோவை மாவட்டம், பீளமேடு காவல் நிலையம் மற்றும் பொள்ளாச்சி மேற்கு காவல் நிலையங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த, 2020-ம் ஆண்டுக்கான சிறந்த காவல் நிலைய விருது, திருப்பூர்தெற்கு காவல் நிலையத்திற்கு வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. அதே போல், 2019 ஆம் ஆண்டிற்கான சிறந்த காவல் நிலையமாக கோவை பந்தய சாலை காவல் நிலையம் தேர்வானது.
மேலும், இந்தியாவின் சிறந்த காவல் நிலையங்களில் முதலிடம் பிடித்த ஆர்.எஸ்.புரம் காவல் நிலையத்திற்கு, கடந்த 2018 ஆம் ஆண்டு மத்திய பிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள எல்லை பாதுகாப்பு படை பயிற்சி மையத்தில் நடைபெற்ற விழாவில் சான்றிதழ் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
அதன்படி, 2021 ஆம் ஆண்டிற்கான சிறந்த காவல் நிலையங்களாக, கோவை பீளமேடு மற்றும் பொள்ளாச்சி மேற்கு காவல் நிலையம், தமிழக அளவில் சிறந்த காவல் நிலையங்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளன.
காவல் நிலையங்களில் வழக்குகளை விரைந்து முடிப்பது, பதிவேடுகளை சரியாக பராமரிப்பது, காவல் நிலையத்தை சுத்தமாக வைத்து கொள்வது உள்ளிட்டவற்றில் சிறப்பாக செயல்படும் காவல் நிலையங்கள் ஆண்டுதோறும் ஆய்வு செய்யப்பட்டு விருது வழங்கப்பட்டு வருகிறது.
அதன்படி, 2021 ஆம் ஆண்டிற்கான சிறந்த காவல் நிலையமாக கோவை மாவட்டம், பீளமேடு காவல் நிலையம் மற்றும் பொள்ளாச்சி மேற்கு காவல் நிலையங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த, 2020-ம் ஆண்டுக்கான சிறந்த காவல் நிலைய விருது, திருப்பூர்தெற்கு காவல் நிலையத்திற்கு வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. அதே போல், 2019 ஆம் ஆண்டிற்கான சிறந்த காவல் நிலையமாக கோவை பந்தய சாலை காவல் நிலையம் தேர்வானது.
மேலும், இந்தியாவின் சிறந்த காவல் நிலையங்களில் முதலிடம் பிடித்த ஆர்.எஸ்.புரம் காவல் நிலையத்திற்கு, கடந்த 2018 ஆம் ஆண்டு மத்திய பிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள எல்லை பாதுகாப்பு படை பயிற்சி மையத்தில் நடைபெற்ற விழாவில் சான்றிதழ் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.