தமிழக அளவில் கோவை பீளமேடு மற்றும் பொள்ளாச்சி மேற்கு காவல் நிலையங்கள் சிறந்த காவல் நிலையங்களாக தேர்வு.

தமிழக அரசின் சார்பில் ஆண்டு தோறும் மாநில அளவில் சிறப்பாக செயல்படும் காவல் நிலையங்கள் தேர்வு செய்யப்பட்டு வருகிறது. அதன்படி, 2021 ஆம் ஆண்டிற்கான சிறந்த காவல் நிலையங்களாக, கோவை பீளமேடு மற்றும் பொள்ளாச்சி மேற்கு காவல் நிலையம், தேர்வு.


கோவை: தமிழக அரசின் சார்பில் ஆண்டு தோறும் மாநில அளவில் சிறப்பாக செயல்படும் காவல்நிலையங்கள் தேர்வு செய்யப்பட்டு தமிழக முதல்வரால் கேடயமும, பாராட்டு சான்றிதழ்களும் வழங்கப்பட்டு வருகிறது.

அதன்படி, 2021 ஆம் ஆண்டிற்கான சிறந்த காவல் நிலையங்களாக, கோவை பீளமேடு மற்றும் பொள்ளாச்சி மேற்கு காவல் நிலையம், தமிழக அளவில் சிறந்த காவல் நிலையங்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளன.

காவல் நிலையங்களில் வழக்குகளை விரைந்து முடிப்பது, பதிவேடுகளை சரியாக பராமரிப்பது, காவல் நிலையத்தை சுத்தமாக வைத்து கொள்வது உள்ளிட்டவற்றில் சிறப்பாக செயல்படும் காவல் நிலையங்கள் ஆண்டுதோறும் ஆய்வு செய்யப்பட்டு விருது வழங்கப்பட்டு வருகிறது.

அதன்படி, 2021 ஆம் ஆண்டிற்கான சிறந்த காவல் நிலையமாக கோவை மாவட்டம், பீளமேடு காவல் நிலையம் மற்றும் பொள்ளாச்சி மேற்கு காவல் நிலையங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த, 2020-ம் ஆண்டுக்கான சிறந்த காவல் நிலைய விருது, திருப்பூர்தெற்கு காவல் நிலையத்திற்கு வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. அதே போல், 2019 ஆம் ஆண்டிற்கான சிறந்த காவல் நிலையமாக கோவை பந்தய சாலை காவல் நிலையம் தேர்வானது.

மேலும், இந்தியாவின் சிறந்த காவல் நிலையங்களில் முதலிடம் பிடித்த ஆர்.எஸ்.புரம் காவல் நிலையத்திற்கு, கடந்த 2018 ஆம் ஆண்டு மத்திய பிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள எல்லை பாதுகாப்பு படை பயிற்சி மையத்தில் நடைபெற்ற விழாவில் சான்றிதழ் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி கோவை காவல் ஆணையரிடம் தவெக மகளிர் அணி புகார்

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து பேசியதாகக் கூறி, உதயநிதி மீது சட்டரீதியான நடவ...

கேஎம்சிஹெச்சில் உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர் திறப்பு விழா

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் ஆகஸ்ட் 2ம் தேதி 'லைஃப் ஆப்டர் லைஃப் 2026' விழாவும், உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர்...

சித்தாபுதூர் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளி ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை சித்தாபுதூரில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் ஜூலை 31ஆம் தேதி சிற...

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...