பொள்ளாச்சி சாலையில் உருவான ராட்சத பள்ளம்

பொள்ளாச்சி மீன்கரை சாலையில் திடீரென ராட்சத பள்ளம் ஏற்பட்டதால் வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்தனர். குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு திடீரென 5 அடி பள்ளம் ஏற்பட்டுள்ளது.


கோவை: பொள்ளாச்சி மீன்கரை சாலையில் திடீரென ராட்சத பள்ளம் ஏற்பட்டதால் வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்தனர்.

பொள்ளாச்சி மீன்கரை தேசிய நெடுஞ்சாலையில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் வந்து செல்கின்றன.



இந்நிலையில் வழக்கம்போல் இன்றும் வாகன போக்குவரத்து இயங்கிக் கொண்டிருந்த போது பொள்ளாச்சி மீன்கரை சாலையில் உள்ள கண்ணப்பன் நகர் பேருந்து நிறுத்தம் அருகே சாலை நடுவே குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு திடீரென 5 அடி பள்ளம் ஏற்பட்டது.

இதனால் அவ்வழியாக வந்த வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்து மாற்றுப்பாதையில் சென்றனர். பின்னர் பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்ததையடுத்து அங்கு வந்த அதிகாரிகள் சாலையைச் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அம்பராம்பாளையம் ஆற்றுப்படுகையிலிருந்து நகராட்சிக்குக் குடிநீர் கொண்டு செல்வதற்காகச் சாலையைத் தோண்டி பொருத்தப்பட்டிருந்த பிரதான குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டதால் அரிப்பு ஏற்பட்டு பள்ளம் ஏற்பட்டுள்ளதாக நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.



காலை நேரத்தில் பள்ளம் ஏற்பட்டதால் சுதாரித்துக் கொண்ட வாகன ஓட்டிகள் மாற்றுப்பாதையில் செல்ல முடிந்தது. இரவு நேரம் ஏற்பட்டிருந்தால் 5 அடி பள்ளத்தில் வாகன ஓட்டிகள் விழுந்து மிகப்பெரிய விபத்து ஏற்பட்டிருக்கும்.

தரமற்ற சாலைகள் அமைப்பதால் இது போன்ற நிகழ்வுகள் ஏற்படுவதாகவும் விபரீதம் ஏற்பட்டால் மட்டும்தான் அதிகாரிகளின் விழித்துக்கொள்வார்களா? என்று கேள்வி எழுப்பியுள்ள சமூக ஆர்வலர்கள், இது போன்ற சாலைகளை வரும் முன் காப்போம் என்ற அடிப்படையில் அவ்வப்போது அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவையில் மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப் போட்டி: 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

கோவையில் உள்ள கங்கா முதுகுத்தண்டு காயம் மறுவாழ்வு மையத்தில் நடைபெற்ற தமிழ்நாடு மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப்...

‘பியூஸ் கட்டை திருட்டு’, ‘சதி’ என ரீல்களை நிறுத்திவிட்டு, ரியல் நிர்வாகத்தில் கவனம் செலுத்த வேண்டும்: செந்தில் பாலாஜி

தமிழகத்தில் தொடரும் மின்வெட்டு மற்றும் மக்கள் போராட்டங்கள் தொடர்பாக, பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்குப் பதிலாக திசைதிருப்...

கிணத்துக்கடவில் 10,000 மரக்கன்றுகள் நடவு தொடக்கம்

கிணத்துக்கடவு கொண்டம்பட்டி ஊராட்சியில் சமூக பங்களிப்பு நிதியின் கீழ் 10,000 மரக்கன்றுகள் நடும் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர...

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பிய வழக்கில் 3 காவலர்கள் பணியிடை நீக்கம்

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து தப்பிய மோசடி வழக்கு கைதிக்கு உதவியதாக இரண்டாம் நிலை காவலர் மற்றும் கார் ஓட்டுநர் கைது...

காடுவெட்டிபாளையம் பகுதியில் நாளை மின்தடை

பாப்பம்பட்டி, என்.ஜி.பாளையம், எஸ்.ஆர்.பாளையம், அன்னூர் பகுதி மற்றும் சுண்டமேடு பகுதியில் ஜூன் 15 காலை 9 மணி முதல் மாலை 4...

பட்டணம் பகுதியில் நாளை மின்தடை அறிவிப்பு

பட்டணம், பட்டணம் புதூர், கம்பன் நகர், நொய்யல் நகர், சத்யநாராயணபுரம், காரவளி சாலை, நாகமநாயக்கன்பாளையம், காவேரி நகர் மற்று...