ஸ்ரீ சக்தி பொறியியல் கல்லூரியில் "கணினி கருத்து பரிமாற்றம் மற்றும் தகவல் பரிமற்றதிற்கான" கருத்தரங்கு நிறைவுவிழா


கோவையில் உள்ள ஸ்ரீ சக்தி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் 2017ம் ஆண்டின் (ICCCI) கணினி கருத்து பரிமாற்றம் மற்றும் தகவல் பரிமற்றதிற்கான அகில உலக கருத்தரங்கு நிறைவுவிழா இன்று நடைபெற்றது. நிறைவு விழாவில் சிறப்பு விருந்தினராக ஸ்காவா சிஸ்டம்ஸ் துணைத் தலைவர் முரளி கிருஷ்ணன், தலைமை வடிவமைப்பாளர் குமார் மாதவன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். 



இந்நிகழ்ச்சியில், கணினி பொறியியல் துறைத்தலைவர் கண்ணம்மாள் வரவேற்புரை வழங்கினார். அதனைத் தொடர்ந்து கல்லூரியின் தாளாளர் தங்கவேலு தனது உரையில் மாணவர்கள் தங்கள் கல்லூரி பருவத்திலேயே ஒரு தொழிலதிபராகவும், ஆராய்ச்சியாளர்களாகவும் சிந்தித்து செயல்பட வேண்டும் என மாணவர்களுக்கு அறிவுரைக் கூறினார். சிறப்பு விருந்தினர் குமார் மாதவன் பேசுகையில், மாணவர்கள் கல்லூரி பாடங்களை புரிந்து கற்க வேண்டும் மேலும் அவற்றை ஆராய்ச்சி நோக்கத்துடன் அனுக வேண்டும் என்று கூறினார். அவரைத் தொடர்ந்து முரளி கிருஷ்ணன் கூறுகையில், தொலைபேசி வர்த்தகம் இன்றைய காலகட்டத்தில் மிகவும் இன்றியமையாததாக விளங்குகிறது. மேலும் மாணவர்கள் வெற்றியாளர்களாக இருக்க வேண்டுமெனில் தொழில்நுட்பத்தில் தொலைநோக்கு பார்வை இருக்க வேண்டும் எனக் கூறினார். 



இறுதியில், இக்கருத்தரங்கில் பங்கேற்றவர்களுக்கு விருதுகளும், சன்றிதழ்களும் வழங்கி சிறப்பிக்கப்பட்டது. தகவல் தொடர்பியல் துறைத்தலைவர் பிரகாஷ் நன்றியுரைக் கூறினார். 



Newsletter

பெரியநாயக்கன்பாளையம் பட்டத்தரசி அம்மன் திருவிழா - O.K. சின்னராஜ் வழிபாடு

கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே நாயக்கனூரில் உள்ள அருள்மிகு பட்டத்தரசி அம்மன் திருக்கோவிலில் பங்குனி திருவிழா இன்று நடைப...

2026 தேர்தல்: தொண்டாமுத்தூர் ரவி பங்கேற்ற மேட்டுப்பாளையம் தொகுதி பிரச்சார திட்டமிடல்

மேட்டுப்பாளையம் தொகுதி அலுவலகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான திமுக வேட்பாளரின் பிரச்சார சுற்றுப்பயண தயாரிப்பு மற்றும...

N.R. கார்த்திகேயன் தலைமையில் திமுக தேர்தல் பணிகள் குறித்த ஆலோசனை

கோவை தொண்டாமுத்தூர் தொகுதியில் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறுவதற்கான ஆக்கபூர்வமான பணிகள் குறித்து திமுக நிர்வாகிகள் கலந்...

தேர்தல் பார்வையாளர்கள் பட்டியல்: Dr மகேந்திரன் பொள்ளாச்சி வால்பாறை தொகுதி நியமனம்

2026 சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் வாக்குச்சாவடிகளில் Dr மகேந்திரன் உள்ளிட்டோர் பார்வையாளர்களாக நியமி...

கோவையில் ஏர் இந்தியா நிறுவனத்தின் விமான சேவைகளை அதிகரிக்க தொழில்துறையினர் வலியுறுத்தல்

கோவையில் ஏர் இந்தியா விமான சேவைகளை அதிகரிக்க கொங்கு குளோபல் போரம் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. தற்போது டெல்லி மற்...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு: மார்ச் 31 நிலவரம்

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் மழை நீர் வரத்தால் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. திருப்ப...