நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19-ம் தேதி நடக்கிறது. இதை ஒட்டி செய்யப்படவேண்டிய போலீஸ் பாதுகாப்பு பற்றி ஆய்வு செய்ய தமிழ்நாடு காவல்துறை சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி தாமரைக்கண்ணன் கோவை வந்தார்.
கோவை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19-ம் தேதி நடக்கிறது. இதை ஒட்டி செய்யப்படவேண்டிய போலீஸ் பாதுகாப்பு பற்றி ஆய்வு செய்யத் தமிழ்நாடு காவல்துறை சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி தாமரைக்கண்ணன் கோவை வந்தார்.
பின்னர் கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்குச் சென்றார். அங்கு அவருக்கு போலீசார் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. பின்னர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
இதில் கோவை மேற்கு மண்டலத்துக்கு உட்பட்ட 8 மாவட்டங்களைச் சேர்ந்த உயர் போலீஸ் அதிகாரிகள் பங்கேற்றனர். தேர்தல் பிரச்சாரம், ஓட்டுப்பதிவு, ஓட்டு எண்ணிக்கை வரை மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.
தேர்தல் பிரச்சாரத்திற்கு முக்கிய பிரமுகர்கள் வருகையின் போது செய்ய வேண்டிய முன்னேற்பாடு குறித்தும், சிறப்பு நடவடிக்கைகள் குறித்தும் வாக்குச்சாவடிகளில் செய்ய வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகளுக்குக் கூடுதல் டிஜிபி தாமரைக்கண்ணன் ஆலோசனை வழங்கினார்.
இதில் கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பிரதீப்குமார், மேற்கு மண்டல ஐஜி சுதாகர், டிஐஜி முத்துசாமி, மற்றும் துணை போலீஸ் கமிஷனர்கள், போலீஸ் சூப்பிரண்டுகள் பட போலீஸ் உயரதிகாரிகள் பலர் பங்கேற்றனர்.
பின்னர் கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்குச் சென்றார். அங்கு அவருக்கு போலீசார் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. பின்னர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
இதில் கோவை மேற்கு மண்டலத்துக்கு உட்பட்ட 8 மாவட்டங்களைச் சேர்ந்த உயர் போலீஸ் அதிகாரிகள் பங்கேற்றனர். தேர்தல் பிரச்சாரம், ஓட்டுப்பதிவு, ஓட்டு எண்ணிக்கை வரை மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.
தேர்தல் பிரச்சாரத்திற்கு முக்கிய பிரமுகர்கள் வருகையின் போது செய்ய வேண்டிய முன்னேற்பாடு குறித்தும், சிறப்பு நடவடிக்கைகள் குறித்தும் வாக்குச்சாவடிகளில் செய்ய வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகளுக்குக் கூடுதல் டிஜிபி தாமரைக்கண்ணன் ஆலோசனை வழங்கினார்.
இதில் கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பிரதீப்குமார், மேற்கு மண்டல ஐஜி சுதாகர், டிஐஜி முத்துசாமி, மற்றும் துணை போலீஸ் கமிஷனர்கள், போலீஸ் சூப்பிரண்டுகள் பட போலீஸ் உயரதிகாரிகள் பலர் பங்கேற்றனர்.