நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பணிகள்: கோவையில் டிஜிபி ஆலோசனை

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19-ம் தேதி நடக்கிறது. இதை ஒட்டி செய்யப்படவேண்டிய போலீஸ் பாதுகாப்பு பற்றி ஆய்வு செய்ய தமிழ்நாடு காவல்துறை சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி தாமரைக்கண்ணன் கோவை வந்தார்.


கோவை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19-ம் தேதி நடக்கிறது. இதை ஒட்டி செய்யப்படவேண்டிய போலீஸ் பாதுகாப்பு பற்றி ஆய்வு செய்யத் தமிழ்நாடு காவல்துறை சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி தாமரைக்கண்ணன் கோவை வந்தார்.

பின்னர் கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்குச் சென்றார். அங்கு அவருக்கு போலீசார் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. பின்னர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

இதில் கோவை மேற்கு மண்டலத்துக்கு உட்பட்ட 8 மாவட்டங்களைச் சேர்ந்த உயர் போலீஸ் அதிகாரிகள் பங்கேற்றனர். தேர்தல் பிரச்சாரம், ஓட்டுப்பதிவு, ஓட்டு எண்ணிக்கை வரை மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

தேர்தல் பிரச்சாரத்திற்கு முக்கிய பிரமுகர்கள் வருகையின் போது செய்ய வேண்டிய முன்னேற்பாடு குறித்தும், சிறப்பு நடவடிக்கைகள் குறித்தும் வாக்குச்சாவடிகளில் செய்ய வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகளுக்குக் கூடுதல் டிஜிபி தாமரைக்கண்ணன் ஆலோசனை வழங்கினார்.

இதில் கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பிரதீப்குமார், மேற்கு மண்டல ஐஜி சுதாகர், டிஐஜி முத்துசாமி, மற்றும் துணை போலீஸ் கமிஷனர்கள், போலீஸ் சூப்பிரண்டுகள் பட போலீஸ் உயரதிகாரிகள் பலர் பங்கேற்றனர்.

Newsletter

கோவையில் மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப் போட்டி: 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

கோவையில் உள்ள கங்கா முதுகுத்தண்டு காயம் மறுவாழ்வு மையத்தில் நடைபெற்ற தமிழ்நாடு மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப்...

‘பியூஸ் கட்டை திருட்டு’, ‘சதி’ என ரீல்களை நிறுத்திவிட்டு, ரியல் நிர்வாகத்தில் கவனம் செலுத்த வேண்டும்: செந்தில் பாலாஜி

தமிழகத்தில் தொடரும் மின்வெட்டு மற்றும் மக்கள் போராட்டங்கள் தொடர்பாக, பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்குப் பதிலாக திசைதிருப்...

கிணத்துக்கடவில் 10,000 மரக்கன்றுகள் நடவு தொடக்கம்

கிணத்துக்கடவு கொண்டம்பட்டி ஊராட்சியில் சமூக பங்களிப்பு நிதியின் கீழ் 10,000 மரக்கன்றுகள் நடும் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர...

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பிய வழக்கில் 3 காவலர்கள் பணியிடை நீக்கம்

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து தப்பிய மோசடி வழக்கு கைதிக்கு உதவியதாக இரண்டாம் நிலை காவலர் மற்றும் கார் ஓட்டுநர் கைது...

காடுவெட்டிபாளையம் பகுதியில் நாளை மின்தடை

பாப்பம்பட்டி, என்.ஜி.பாளையம், எஸ்.ஆர்.பாளையம், அன்னூர் பகுதி மற்றும் சுண்டமேடு பகுதியில் ஜூன் 15 காலை 9 மணி முதல் மாலை 4...

பட்டணம் பகுதியில் நாளை மின்தடை அறிவிப்பு

பட்டணம், பட்டணம் புதூர், கம்பன் நகர், நொய்யல் நகர், சத்யநாராயணபுரம், காரவளி சாலை, நாகமநாயக்கன்பாளையம், காவேரி நகர் மற்று...