நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பணிகள்: கோவையில் டிஜிபி ஆலோசனை

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19-ம் தேதி நடக்கிறது. இதை ஒட்டி செய்யப்படவேண்டிய போலீஸ் பாதுகாப்பு பற்றி ஆய்வு செய்ய தமிழ்நாடு காவல்துறை சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி தாமரைக்கண்ணன் கோவை வந்தார்.


கோவை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19-ம் தேதி நடக்கிறது. இதை ஒட்டி செய்யப்படவேண்டிய போலீஸ் பாதுகாப்பு பற்றி ஆய்வு செய்யத் தமிழ்நாடு காவல்துறை சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி தாமரைக்கண்ணன் கோவை வந்தார்.

பின்னர் கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்குச் சென்றார். அங்கு அவருக்கு போலீசார் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. பின்னர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

இதில் கோவை மேற்கு மண்டலத்துக்கு உட்பட்ட 8 மாவட்டங்களைச் சேர்ந்த உயர் போலீஸ் அதிகாரிகள் பங்கேற்றனர். தேர்தல் பிரச்சாரம், ஓட்டுப்பதிவு, ஓட்டு எண்ணிக்கை வரை மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

தேர்தல் பிரச்சாரத்திற்கு முக்கிய பிரமுகர்கள் வருகையின் போது செய்ய வேண்டிய முன்னேற்பாடு குறித்தும், சிறப்பு நடவடிக்கைகள் குறித்தும் வாக்குச்சாவடிகளில் செய்ய வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகளுக்குக் கூடுதல் டிஜிபி தாமரைக்கண்ணன் ஆலோசனை வழங்கினார்.

இதில் கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பிரதீப்குமார், மேற்கு மண்டல ஐஜி சுதாகர், டிஐஜி முத்துசாமி, மற்றும் துணை போலீஸ் கமிஷனர்கள், போலீஸ் சூப்பிரண்டுகள் பட போலீஸ் உயரதிகாரிகள் பலர் பங்கேற்றனர்.

Newsletter

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி கோவை காவல் ஆணையரிடம் தவெக மகளிர் அணி புகார்

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து பேசியதாகக் கூறி, உதயநிதி மீது சட்டரீதியான நடவ...

கேஎம்சிஹெச்சில் உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர் திறப்பு விழா

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் ஆகஸ்ட் 2ம் தேதி 'லைஃப் ஆப்டர் லைஃப் 2026' விழாவும், உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர்...

சித்தாபுதூர் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளி ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை சித்தாபுதூரில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் ஜூலை 31ஆம் தேதி சிற...

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...