சங்கரா கல்லூரியில் “உயர்கல்வியில் தரமேன்பாடுகள்” குறித்த தேசியக் கருத்தரங்கு

சங்கரா அறிவியல் மற்றும் வணிகவியல் கல்லூரியில் இன்று தேசிய தரமதிப்பீட்டு அங்கீகாரக் குழுவின் நிதிநல்கையுடன் கல்லூரியின் உள்தர உறுதிக் குழுவின் சார்பில் “உயர்கல்வியில் தரமேன்பாடுகள்” என்ற தலைப்பில் ஒரு நாள் தேசியக் கருத்தரங்கு கல்லூரி அரங்கில் நடைபெற்றது. கல்லூரி பாலகிருஷ்ணன் வரவேற்புரையாற்றினார். கோவை பாரதியார் பல்கலைக்கழகப் பதிவாளர் (பொறுப்பு) வனிதா கருத்தரங்கினைத் துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார். அவரது உரையில் உலகத்தரத்தை அடைய கடைப்பிடிக்க வேண்டிய மாறுதல்கள் குறித்து பேசினார்.



கருத்தரங்கம் மூன்று அமர்வுகளாக நடைபெற்றது. முதல் அமர்வில் காந்திகிராம பல்கலைக்கழக வேதியியல் துறைப் பேராசிரியர் மற்றும் IQAC இயக்குநர் சேதுராமன் உயர்கல்வியில் தர மதிப்பீடுகள் என்னும் தலைப்பில் ஒளிப்படக்காட்சிகள் மூலம் விளக்கினார். அவரது உரையில் தகுதி வாய்ந்த மனித வள ஆதாரங்களை உருவாக்குவதில் ஆய்வுப்பணியில் பயிற்சிகள், ஆசிரியர் தொழிலில் நிர்வாகத் தேவைகள் மற்றும் தகுதியான வேலை வாய்ப்புகளை உருவாக்குதலின் தேவைகளை எடுத்துரைத்தார்.



இரண்டாம் அமர்வில் காந்திகிராம பல்கலைக்கழகக் கணினிப் பயன்பாட்டுத் துறைத்தலைவர் சண்முகவடிவு உயர்கல்வி நிறுவனங்களில் தரமதிப்பீட்டு அளவீடுகள் என்னும் தலைப்பில் ஒளிப்படக்காட்சிகள் மூலம் உரையாற்றினார். அவரது உரையில் புதிய கல்விக் கொள்கை, வகுப்பறையில் ஆசிரியர்களின் செயல்பாடுகள், ஆசிரியர்கள் கடைப்பிடிக்க வேண்டிய அணுகுமுறைகள் குறித்து விளக்கமாக கூறினார்.



மூன்றாம் அமர்வில் திருச்சி ஸ்ரீமத் ஆண்டவர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் ராதிகா கற்றல் கற்பித்தலில் தர மேன்பாடுகள் குறித்து சிறப்பான விளக்கவுரை நிகழ்த்தினார். 



இக்கருத்தரங்கில் கோவை, ஈரோடு, ஊட்டி, பகுதிகளில் உள்ள கல்லூரிகளிலிருந்து 250க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மற்றும் ஆய்வாளர்கள் மற்றும் பல்வேறு கல்லூரிகளின் IQAC ஒருங்கிணைப்பாளர்கள் கலந்து கொண்டனர், கருத்தரங்கு நிரைவு நிகழ்ச்சியில் சங்கரா கல்லூரி IQAC யின் பொறுப்பாளர் உமா தேசியதரமதிப்பீட்டு அங்கீகாரக் குழுவின் நடவடிக்கைகள் குறித்து சுருக்கமாக உரை நிகழ்த்தினார். கருத்தரங்கில் கலந்து கொண்டவர்கள் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டன. நிறைவாக சங்கரா கல்லூரியின் IQACயின் ஒருங்கிணைப்பாளர் சுரேஷ்பாபு நன்றியுரை கூறினார்.



Newsletter

திமுக தேர்தல் அறிக்கையில் மின்சார கோரிக்கைகள் இல்லை: மறுசுழற்சி ஜவுளி கூட்டமைப்பு ஏமாற்றம்

திமுக தேர்தல் அறிக்கையில் மின்கட்டணம் குறைப்பு, நிலை கட்டணம் குறைப்பு உள்ளிட்ட மின்சாரத்துறை கோரிக்கைகள் இடம்பெறாதது மறு...

சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம்: அதிமுக தேர்தல் அறிக்கையை தொழில்துறை வரவேற்பு

Coimbatore: சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம் வழங்குவது தொடர்பான அதிமுக தேர்தல் அறிக்கை...

சாதனைகளை கூறி வெற்றி பெறுவேன்; யாரையும் குறைத்து மதிப்பிடவில்லை - செந்தில் பாலாஜி

கோவை தெற்கு தொகுதியில் DMK வேட்பாளர் செந்தில் பாலாஜி தேர்தல் பணி குழு அலுவலகத்தை காந்திபுரத்தில் திறந்து வைத்தார். எதிரண...

கோவையை உலகத் தர நகரமாக மாற்ற கருத்தரங்கம்

கோவை நவஇந்தியாவில் ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் “கோயம்புத்தூரை உலகத் தர நகரமாக மாற்றுவோம்” கருத்தரங...

மகாவீர் ஜெயந்தி: மார்ச் 31ல் இறைச்சி விற்பனைக்கு தடை - கோயம்புத்தூர் மாநகராட்சி அறிவிப்பு

மகாவீர் ஜெயந்தி விழாவையொட்டி மார்ச் 31, 2026 அன்று கோயம்புத்தூர் மாநகராட்சி பகுதியில் அனைத்து விதமான இறைச்சி விற்பனை மற்...

கவுண்டம்பாளையம் தொகுதியில் NTK வேட்பாளர் கலாமணி ஜெகநாதன் வேட்புமனு தாக்கல்

கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக கலாமணி ஜெகநாதன் இன்று வேட்புமனுவை தாக்கல் செய்தா...