நகர மக்கள் முதல் கிராம மக்கள் அனைவரும் வெகுண்டெழுந்து உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவை வெற்றி பெறச் செய்வார்கள் என தெரிவித்தார்.
கோவை: ஏழை எளிய மக்களுக்கு திமுக விரோத ஆட்சியாக செயல்படுவதால், உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக மிகப் பெரிய வெற்றியைப் பெறும் என்று பொள்ளாச்சி ஜெயராமன் தெரிவித்தார்.
அதிமுக ஆட்சியில் பொள்ளாச்சி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட புரவிபாளையம், போடிபாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஏழை எளிய மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டாக்கள் வழங்கப்பட்டது.
தற்போது திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு இதுவரை வழங்கப்பட்ட பட்டாக்களுக்கு இடம் அளவீடு செய்து தரப்படவில்லை.

எனவே, உடனடியாக இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்ட மக்களுக்கு நில அளவீடு செய்ய வேண்டும் என்று பொள்ளாச்சி சார் ஆட்சியர் தாக்ரே -சுபம்- ஞானதேவ் - ராவிடம் சட்டமன்ற உறுப்பினர் பொள்ளாச்சி ஜெயராமன் மற்றும் கிராம மக்கள் கோரிக்கை மனு அளித்தனர்.

பின்னர் செய்தியாளர்களுக்கு ஜெயராமன் அளித்த பேட்டியின்போது, அதிமுக ஆட்சியில் வீட்டுமனை பட்டாக்கள் வழங்கப்பட்டு, பல மாதங்களாகியும் இதுவரை நில அளவீடு செய்து தரப்படவில்லை. உடனடியாக நில அளவீடு செய்து தர வேண்டும்.
10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, பொங்கல் பரிசாக ஒரு முறை ஆயிரம் ரூபாயும் கடந்த ஆண்டு 2500 ரூபாய் வழங்கப்பட்டது. மேலும் கொரோனா நிவாரண நிதியாக ஆயிரம் ரூபாய், தரமான பரிசு தொகுப்பு பொருட்களும் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.
ஆனால், திமுக ஆட்சியில் இது எதுவும் நடைபெறவில்லை. இதனால் தமிழகம் முழுவதும் மக்கள் கொந்தளித்து உள்ளனர். இதுவரை இலவச வேஷ்டி சேலை வழங்கப்படவில்லை. இந்த ஆட்சி ஏழை எளிய மக்களுக்கு விரோத ஆட்சி. இதனால் நகர மக்கள் முதல் கிராம மக்கள் அனைவரும் வெகுண்டெழுந்து உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவை வெற்றி பெறச் செய்வார்கள் என தெரிவித்தார்.
அதிமுக ஆட்சியில் பொள்ளாச்சி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட புரவிபாளையம், போடிபாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஏழை எளிய மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டாக்கள் வழங்கப்பட்டது.
தற்போது திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு இதுவரை வழங்கப்பட்ட பட்டாக்களுக்கு இடம் அளவீடு செய்து தரப்படவில்லை.
எனவே, உடனடியாக இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்ட மக்களுக்கு நில அளவீடு செய்ய வேண்டும் என்று பொள்ளாச்சி சார் ஆட்சியர் தாக்ரே -சுபம்- ஞானதேவ் - ராவிடம் சட்டமன்ற உறுப்பினர் பொள்ளாச்சி ஜெயராமன் மற்றும் கிராம மக்கள் கோரிக்கை மனு அளித்தனர்.
பின்னர் செய்தியாளர்களுக்கு ஜெயராமன் அளித்த பேட்டியின்போது, அதிமுக ஆட்சியில் வீட்டுமனை பட்டாக்கள் வழங்கப்பட்டு, பல மாதங்களாகியும் இதுவரை நில அளவீடு செய்து தரப்படவில்லை. உடனடியாக நில அளவீடு செய்து தர வேண்டும்.
10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, பொங்கல் பரிசாக ஒரு முறை ஆயிரம் ரூபாயும் கடந்த ஆண்டு 2500 ரூபாய் வழங்கப்பட்டது. மேலும் கொரோனா நிவாரண நிதியாக ஆயிரம் ரூபாய், தரமான பரிசு தொகுப்பு பொருட்களும் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.
ஆனால், திமுக ஆட்சியில் இது எதுவும் நடைபெறவில்லை. இதனால் தமிழகம் முழுவதும் மக்கள் கொந்தளித்து உள்ளனர். இதுவரை இலவச வேஷ்டி சேலை வழங்கப்படவில்லை. இந்த ஆட்சி ஏழை எளிய மக்களுக்கு விரோத ஆட்சி. இதனால் நகர மக்கள் முதல் கிராம மக்கள் அனைவரும் வெகுண்டெழுந்து உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவை வெற்றி பெறச் செய்வார்கள் என தெரிவித்தார்.